ADVERTISEMENT
திண்டிவனம் : தியாகதுருகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர், திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 58; திண்டிவனம் சேடன் குட்டைத் தெருவில் வசித்து வந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் காவல் நிலையத்தில், கடந்தாண்டு முதல் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ராணி, 56; இரண்டாவது மனைவி மேகலா, 49. முதல் மனைவி மூலம் மகள் தேன்மொழி, 30; மகன் விவேகானந்தன், 26;. இரண்டாவது மனைவி மூலம் புவன்,16; என்ற மகன் உள்ளனர்.
தற்போது, திண்டிவனத்தில் இரண்டாவது மனைவி மேகலாவுடன் வசித்து வந்தார்.
கடந்தாண்டு அக்டோபர் 25ம் தேதி முதல், 54 நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்தார். அதன் பிறகு, கடந்த மாதம் 21ம் தேதி, தியாகதுருகம் காவல் நிலையத்திற்கு பணிக்கு திரும்ப வேண்டும்.
ஆனால், பணிக்கு திரும்பாமல் 34 நாட்களாக 'ஆப்சென்ட்டில்' இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மேகலா -முருகன் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.
அதில் விரக்தியடைந்த முருகன், நள்ளிரவு 1:00 மணிக்கு, முதல் மனைவி ராணியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வருத்தமாக பேசி உள்ளார்.
இந்நிலையில், காலை மேகலா எழுந்து பார்த்தபோது முருகனைக் காணாததால் மாடிக்குச் சென்று பார்த்தார்.
அங்கு உள் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, முருகன் மின் விசிறியில் துாக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடன் அவரை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து முதல் மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து, குடும்ப பிரச்னை காரணமாக, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
பதவி உயர்வு கிடைக்காத விரக்தியா?
முருகன், கடந்த 1987ம் ஆண்டு நேரடியாக சப் இன்ஸ்பெக்டராக தேர்வாகி பணியில் சேர்ந்தார். அவருடன் சேர்ந்த பலர் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., என பதவி உயர்வு பெற்று விட்டனர். ஆனால், தற்போது வரை, முருகனுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை.பல்வேறு காரணங்களுக்காக 'மெமோ' வாங்கிய அவர், அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டு வந்தார். மேலும், பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!