மாஜி சிறப்பு டி.ஜி.பி., வழக்கு; இன்ஸ்பெக்டர் சாட்சியம்
விழுப்புரம் : மாஜி சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கில், கடலுார் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். வழக்கு விசாரணை, வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.
பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, மாஜி சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில், தற்போது சாட்சி விசாரணை நடந்து வருகிறது.
நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது, மாஜி சிறப்பு டி.ஜி.பி., ஆஜராகவில்லை. செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் ஆஜரானார்.
அரசு தரப்பு சாட்சியான சி.பி.சி.ஐ.டி., முன்னாள் இன்ஸ்பெக்டரும், தற்போதைய கடலுார் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டருமான சுந்தர்ராஜன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அவரிடம், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!