Load Image
Advertisement

குடையோட வெளியே போங்க!: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டுமாம்


சென்னை: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று(டிச.,12) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Latest Tamil News


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
மழை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருவள்லூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, விழுப்புரம் ஆகிய 26 மாவட்டங்களில் இன்று(டிச.,12) கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். அடுத்த 5 நாட்களுக்கு தமிகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரூ இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை நிலவரம்:





இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி தாலுகாக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Tamil News

தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று மதியத்திற்கு மேல் அரை நாள் விடுமுறை விடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மதியம் மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.



வாசகர் கருத்து (1)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    தமிழகத்தின் புயல் தாக்கத்தினால், இப்பொழுது பெங்களூருவில் இடியுடன் கூடிய மழை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்