ADVERTISEMENT
போபால்: வேலை முடிந்து வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கும் போது பக்கத்து வீட்டிலுள்ள சேவல் கூவி கூவி தூக்கத்தை கலைத்து விடுவதாக டாக்டர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
போபாலில் அக்கம்பக்கத்தில் அதிகம் ஒலி வைத்து பாட்டு கேட்டால், ஏதேனும் பிரச்னை நடந்தால் போலீசாரிடம் புகார் கொடுப்பது வழக்கம். இந்தூரை சேர்ந்த டாக்டர் அலோக் மோடி போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். இந்தூரின் பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகே வசித்து வரும் அலோக் மோடி புகாரில், ''பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பெண் ஒருவர் கோழி, சேவல் வளர்த்து வருகிறார். சேவல் கோழிகள் தினமும் அதிகாலை 5:00 மணிக்கெல்லாம் கூவுகிறது.
இதனால் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கும் போது சேவல் கூவி தூக்கத்தை கலைத்து விடுகிறது. அது முற்றிலும் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது,'' என குறிப்பிட்டிருக்கிறார். அலோக் மோடியின் புகாரை பலாசியா காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் சிங் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
முதலில் இருதரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சேவல் கூவும் சிக்கலை தீர்க்க குற்றவியல் நடைமுறையை பின்பற்றுவோம் எனவும், பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுப்போம் எனவும் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.
போபாலில் அக்கம்பக்கத்தில் அதிகம் ஒலி வைத்து பாட்டு கேட்டால், ஏதேனும் பிரச்னை நடந்தால் போலீசாரிடம் புகார் கொடுப்பது வழக்கம். இந்தூரை சேர்ந்த டாக்டர் அலோக் மோடி போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். இந்தூரின் பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகே வசித்து வரும் அலோக் மோடி புகாரில், ''பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பெண் ஒருவர் கோழி, சேவல் வளர்த்து வருகிறார். சேவல் கோழிகள் தினமும் அதிகாலை 5:00 மணிக்கெல்லாம் கூவுகிறது.
இதனால் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கும் போது சேவல் கூவி தூக்கத்தை கலைத்து விடுகிறது. அது முற்றிலும் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது,'' என குறிப்பிட்டிருக்கிறார். அலோக் மோடியின் புகாரை பலாசியா காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் சிங் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
முதலில் இருதரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சேவல் கூவும் சிக்கலை தீர்க்க குற்றவியல் நடைமுறையை பின்பற்றுவோம் எனவும், பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுப்போம் எனவும் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (7)
இந்தூரில் வாகன ஒலிமாசு இல்லையா என்ன.?
பாவம் அதன் தூக்கத்தை எந்த பெட்டை கோழி கெடுத்ததோ...
நல்ல தீர்ப்புக்காக காத்து இருக்கிறோம்.
seval koovi unakku oru yetcharikkai kodukkirathu...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தினமும் ஐந்து முறையும் பண்டிகைக் காலங்களில் நேரங்காலம் பார்க்காமல் பாங்கு ஓதுவதையும் தடைசெய்ய வேண்டும்