என்.டி.டி.வி இயக்குனர் பதவியில் இருந்து பிரணாய் ராய், அவரது மனைவி விலகல்: பங்குகளை அதானி வாங்கியதால் முடிவு
புதுடில்லி: என்.டி.டி.வி இயக்குனர் பதவியில் இருந்து அதன் நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா பதவி விலகி உள்ளனர்.
![Latest Tamil News]()
என்.டி.டி.வி.யின் 29.18 சதவீதம் அளவிலான பங்குகளை தொழிலதிபரான கவுதம் அதானியின் குழுமம் சமீபத்தில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகாலியா மற்றும் செந்தில் சின்னையா செங்கல்வராயன் ஆகியோர் புதிய இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர்.
அதானி குழுமத்தின் 100 சதவீதம் முழுமையான துணை நிறுவனங்களில் ஒன்றான விஷ்வபிரதான் வர்த்தக தனியார் நிறுவனம், என்.டி.டி.வி.க்கு நிதியுதவி உள்ளிட்ட விவகாரங்களுக்கு உதவியாக இருந்த ஆர்.ஆர்.பி.ஆர். என்ற நிறுவனத்தின் 99.5 சதவீத பங்குகளை கடந்த ஆகஸ்டில் வாங்கியிருந்தது.
![Latest Tamil News]()
இந்த ஆர்.ஆர்.பி.ஆர். நிறுவனம், என்.டி.டி.வி.யின் 29.18 சதவீத பங்குகளை வைத்திருந்தது. அதனை, அதானி குழுமம் தன்வசப்படுத்தி இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, என்.டி.டி.வி.யின் அடுத்த 26 சதவீத பங்குகளையும் விலைக்கு வாங்க அதானி குழுமம் முன்வந்தது. இதனால், என்.டி.டி.வி.யின் 55.18 சதவீத பங்குகள் அந்த குழுமத்திற்கு செல்லும். இது , அந்த குழுமம் என்.டி.டி.வி.யின் உரிமையாளராவதற்கு வழிவகுக்கிறது.
ஆனாலும் என்.டி.டி.வி.யின் 32.26 சதவீத பங்குகளை பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி தங்கள் வசம் வைத்துள்ளனர். இப்பொழுது என்.டி.டி.வி இயக்குனர் பதவியில் இருந்து அதன் நிறுனவர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி பதவி விலகி உள்ளனர்.

என்.டி.டி.வி.யின் 29.18 சதவீதம் அளவிலான பங்குகளை தொழிலதிபரான கவுதம் அதானியின் குழுமம் சமீபத்தில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகாலியா மற்றும் செந்தில் சின்னையா செங்கல்வராயன் ஆகியோர் புதிய இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர்.
அதானி குழுமத்தின் 100 சதவீதம் முழுமையான துணை நிறுவனங்களில் ஒன்றான விஷ்வபிரதான் வர்த்தக தனியார் நிறுவனம், என்.டி.டி.வி.க்கு நிதியுதவி உள்ளிட்ட விவகாரங்களுக்கு உதவியாக இருந்த ஆர்.ஆர்.பி.ஆர். என்ற நிறுவனத்தின் 99.5 சதவீத பங்குகளை கடந்த ஆகஸ்டில் வாங்கியிருந்தது.

இந்த ஆர்.ஆர்.பி.ஆர். நிறுவனம், என்.டி.டி.வி.யின் 29.18 சதவீத பங்குகளை வைத்திருந்தது. அதனை, அதானி குழுமம் தன்வசப்படுத்தி இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, என்.டி.டி.வி.யின் அடுத்த 26 சதவீத பங்குகளையும் விலைக்கு வாங்க அதானி குழுமம் முன்வந்தது. இதனால், என்.டி.டி.வி.யின் 55.18 சதவீத பங்குகள் அந்த குழுமத்திற்கு செல்லும். இது , அந்த குழுமம் என்.டி.டி.வி.யின் உரிமையாளராவதற்கு வழிவகுக்கிறது.
ஆனாலும் என்.டி.டி.வி.யின் 32.26 சதவீத பங்குகளை பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி தங்கள் வசம் வைத்துள்ளனர். இப்பொழுது என்.டி.டி.வி இயக்குனர் பதவியில் இருந்து அதன் நிறுனவர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி பதவி விலகி உள்ளனர்.
வாசகர் கருத்து (28)
அம்பானி கூடிய விரைவில் கேடிகளின் தொலைக்காட்சி உரிமையும் பல்லை தட்டி பறித்து கொண்டால் தமிழ்நாடு உருப்படும்
இன்னும் கொஞ்ச நாள்ல இந்தியாவை ஒட்டுமொத்தமா ஒரு விலை பேசி அதானி வாங்கிவிடுவார் போல இருக்கு . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
இதே மாதிரி தேசத்துரோகிகள் கையில் இருக்கும் அத்தனை ஊடகங்களையும் கைமாற்ற வேண்டும். மக்களுக்கு உண்மை சென்று சேர வேண்டும்.
இனி காழ்புணர்ச்சியாய் இந்த ஊடகத்தில் காட்ட முடியாதது வருத்தமளிக்கிறது. இது வரை என் டி டீவீ யில் ராவுளின் ஊதுகுழாய் செய்யப்பட்டது முடிவிற்கு வந்து விட்டது அதனால் என்ன குடும்ப ஊடகம் ய்ங் இந்தியா யிருக்குதென அதில் பணியாற்றலாம் சம்பளம் கொடுக்க மாட்டார்கள் ஊரன் ஊடகத்தை காசு கொடுக்கம்மால் ராவுளுக்கும் அவர்கள் குடுமத்திற்கும் உஉஉதுக்குழலாக இனி செயல் பட வாய்ப்பில்லை கண்ணா .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இன்னும் கொஞ்ச நாள்ல அதானி இந்தியாவையே ஒட்டுமொத்தமா ஒரு விலை பேசி வாங்கிடுவார் போல இருக்கு .