காட்டுத்தீயை தடுப்பது எப்படி? கருத்து கேட்கிறது மத்திய அரசு!
சென்னை,-வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால், காட்டுத் தீ உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வு காண்பது குறித்து, கருத்து கேட்கும் பணியை, மத்திய வனத்துறை துவக்கி உள்ளது.

தேனி மாவட்டம், குரங்கணி வனப் பகுதியில், 2018 மார்ச் 11ல் காட்டுத்தீ ஏற்பட்டது. மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த, 23 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, காட்டுத் தீ சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது. தடுப்பு முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

இதுகுறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
வனப் பகுதிகளில், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள், மரங்களில் உரசுவதாலும் காட்டுத்தீ ஏற்படுகிறது. எனவே, மின் கம்பிகளை உயரத்தில் அமைக்க வேண்டும்; இதை ஒட்டி உயரமான மரங்கள் வளர்வதை தடுக்க வேண்டும் என, ஆலோசனைகள் கூறப்படுகின்றன.
இது தொடர்பாக, வழிமுறைகளை தெரிவிக்குமாறு, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
மாநில அரசுகள் தெரிவிக்கும் கருத்துக்கள், வல்லுனர்கள் வழிகாட்டுதல்கள் அடிப்படையில், இப்பிரச்னையை தடுக்கும் செயல்திட்டம் இறுதி செய்யப்படும்.
இதன்படி, தமிழகத்தில் எந்தெந்த வனப் பகுதிகளில், மின்கம்பிகள் திறந்த வெளியில் செல்கின்றன; அதில், எந்தெந்த இடங்களில் தாழ்வாக செல்கின்றன என்ற விபரங்கள் திரட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (6)
வாயாலே ஊதி ஊதி அணைக்கலாம்.
காட்டு தீயை அணைக்க, இறக்குமதியான சிறுத்தை புலிக்கு பேர் வைக்க எல்லாம் ஆலோசனை கேட்பீன்க, L.I..C. ஐ விக்க, பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்ய ஆலோசனை கேட்க மாட்டீர்கள் அப்படித்தானே
காடுன்னு இருந்தாத்தானே காட்டுத்தீ வரும்?
முதலில் சுயநலம் கொண்ட மனித ஜென்மங்களை காடுகளுக்குள் அனுமதிப்பதில்லை என்று சட்டம் போடுங்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அக்கினி வீரர்ககை நாலு வருஷம் கழிச்சு தீயணைப்பு வீரர்களா காட்டுக்குள் களமிறக்கலாம்.