பெண்ணுக்கு கொலை மிரட்டல் தலைமை காவலர் சஸ்பெண்ட்
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே, பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தலைமை காவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் போலீஸ் ஸ்டேஷனில், தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜேந்திரன்.
கடந்த சில நாட்களுக்கு முன், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, விடுதி சோதனை உள்ளிட்ட பணிகளுக்காக, திருவண்ணாமலையில் சிறப்பு பணிக்கு அமர்த்தப்பட்டார்.
அப்போது அவர், திருவண்ணாமலையில் ஒரு விடுதியில் சோதனை நடத்திய போது, அங்கிருந்த பெண்ணிடம் சந்தேகத்தின்படி புகைப்படம், மொபைல் எண் ஆகியவற்றை வாங்கி உள்ளார்.
அன்றிரவு அப்பெண்ணை தொடர்பு கொண்டு தகாத முறையில் பேசி மிரட்டல் விடுத்து உள்ளார்.
மேலும், இருமுறை தொடர்ந்து மொபைல்போனில் பேசினார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் டி.எஸ்.பி., அலுவலகத்தில், அப்பெண் புகார் அளித்தார்.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., விசாரித்து, தலைமை காவலர் ராஜேந்திரனை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் போலீஸ் ஸ்டேஷனில், தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜேந்திரன்.
கடந்த சில நாட்களுக்கு முன், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, விடுதி சோதனை உள்ளிட்ட பணிகளுக்காக, திருவண்ணாமலையில் சிறப்பு பணிக்கு அமர்த்தப்பட்டார்.
அப்போது அவர், திருவண்ணாமலையில் ஒரு விடுதியில் சோதனை நடத்திய போது, அங்கிருந்த பெண்ணிடம் சந்தேகத்தின்படி புகைப்படம், மொபைல் எண் ஆகியவற்றை வாங்கி உள்ளார்.
அன்றிரவு அப்பெண்ணை தொடர்பு கொண்டு தகாத முறையில் பேசி மிரட்டல் விடுத்து உள்ளார்.
மேலும், இருமுறை தொடர்ந்து மொபைல்போனில் பேசினார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் டி.எஸ்.பி., அலுவலகத்தில், அப்பெண் புகார் அளித்தார்.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., விசாரித்து, தலைமை காவலர் ராஜேந்திரனை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!