ADVERTISEMENT
சென்னை : ''முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில், முதல் குற்றவாளி நளினியை நான்தான் அடையாளம் காட்டினேன்,'' என்று முன்னாள் போலீஸ் அதிகாரி அனுசுயா தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ராஜிவ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான நளினி, உச்ச நீதிமன்றத்தால் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.
ராஜிவ் கொலை நடந்த இடத்தில், நான் நளினியை பார்த்தேன். அதன் அடிப்படையில் அடையாள அணிவகுப்பில் நளினியை நான்தான் முதல் குற்றவாளியாக அடையாளம் காட்டினேன். நான் அடையாளம் காட்டியதால் மட்டும் நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை. மொத்தம், 1,444 சாட்சியங்களை விசாரித்து ஆவணங்கள் அடிப்படையில் நளினி உள்ளிட்ட 26 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

பொதுக்கூட்ட இடத்தில் தான் இல்லை என்றும் இந்திரா சிலை அருகில் இருந்ததாகவும் நளினி கூறியுள்ளார். இரவு 10:20 மணிக்கு வெளியூர் நபரான நளினிக்கு இந்திரா சிலை அருகில் என்ன வேலை?
ராஜிவ் பொதுக்கூட்ட மைதானத்தில் நளினியும், சுபாவும் ஓட வசதியாக அமர்ந்திருக்கும் படம், பத்திரிகைகளில் வெளியானது. அந்த ஆதாரம் என்னிடம் உள்ளது.
மனித வெடிகுண்டு நடந்த அன்று மாலை 6:00 மணிக்கு நளினியை பொதுக்கூட்ட மேடை அருகே பார்த்தேன்.
நளினி உதவி செய்யாமல் இருந்து இருந்தால் ராஜிவும், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேரும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.
தினமும் பல லட்சம் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாட நளினிக்கு எங்கிருந்த பணம் வந்தது. 31 ஆண்டுகளாக போராட ராஜிவை கொலை செய்தவர்களுக்கு உதவி செய்தது யார். நளினியை குற்றவாளி அல்ல எனக்கூறி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை; கருணை அடிப்படையில்தான் விடுதலை செய்துள்ளது.
இவ்வாறு அனுசுயா கூறினார்.
வாசகர் கருத்து (38)
பேரழிவாளனை யார் பக்கத்தில் வைத்து கொஞ்சியது .... இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் சட்டமன்றத்தில் போட்டது.....
இந்த தீர்ப்பைக் கேள்வி கேட்கவேண்டிய சோனியா குடும்பமே வாயைத் திறக்க வில்லை மற்றவர்கள் பேசி என்ன பயன் ஒருவேளை பேசினால் அது வேறே ஏதாவது புதிய பிரச்சினையை உருவாக்கலாம் என்பதாலா? தன குடும்பத்திற்கு நேர்ந்த அவமானத்தையே சரிசெய்ய முடியாத ராகுல் இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்யப்போகிறார் .
தாணுவின் வெடிகுண்டு வெடித்த பொழுது காங்கிரஸ் காரன் ஒருத்தனும் ராஜிவ் பக்கத்தில் இல்லை நடக்கப்போவதை முன்பே அறிந்துள்ளார்கள் ராஜீவுடன் மரணம் அடைந்த போலீஸ் குடும்பத்துக்கும் மக்களுக்கும் நிவாரணம் அளிக்கப்பட்ட வில்லை
நீங்க அடையாளம் காட்டினவங்களை விடியல் 23 ஆம் புலிகேசி கட்டி அனைத்து விடுதலை வாங்க கொடுத்து பெருமித படுகிறார்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அரசு கைது செய்துவிடும்