பெண்கள் கல்லூரி முன் இளைஞர்கள் ரகளை: தட்டி கேட்டவருக்கு அடி உதை
மதுரை : மதுரை கோரிப்பாளையம் மீனாட்சி அரசு கல்லுாரி முன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக்கேட்டவருக்கு அடி உதை விழுந்தது. இதுதொடர்பாக சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அரசு மருத்துவமனையில் இறந்தவர் உடலை பெற்றுக்கொண்டு ஆம்புலன்சில் தத்தனேரி சுடுகாட்டிற்கு நேற்று மாலை 4:00 மணிக்கு உறவினர்கள் எடுத்துச்சென்றனர். ஆம்புலன்ஸ் முன்பு டூவீலரில் போதையில் வந்த சில இளைஞர்கள், மீனாட்சி கல்லுாரி வாசல் முன்பு ரகளையில் ஈடுபட்டனர். கல்லுாரி முடிந்து வெளியே வந்த மாணவியர் பயத்தில் அலறினர். அப்போது மகளை அழைத்துச்செல்ல காத்திருந்த ஒருவர், இளைஞர்களை கண்டித்தார்.
இதனால் ஆத்திரமுற்றவர்கள் அவரை தாக்கினர். ஆபாசமாக பேசி மிரட்டினர். கல்லுாரி வாசலில் நடந்த இச்சம்பவத்தால் பாதுகாப்பு கருதி மாணவியரை வெளியே விடாமல் சிறிது நேரம் கேட் பூட்டப்பட்டது. பின்னர் இளைஞர்கள் சென்றபிறகு மாணவியர் அனுப்பப்பட்டனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் இறந்தவர் உடலை பெற்றுக்கொண்டு ஆம்புலன்சில் தத்தனேரி சுடுகாட்டிற்கு நேற்று மாலை 4:00 மணிக்கு உறவினர்கள் எடுத்துச்சென்றனர். ஆம்புலன்ஸ் முன்பு டூவீலரில் போதையில் வந்த சில இளைஞர்கள், மீனாட்சி கல்லுாரி வாசல் முன்பு ரகளையில் ஈடுபட்டனர். கல்லுாரி முடிந்து வெளியே வந்த மாணவியர் பயத்தில் அலறினர். அப்போது மகளை அழைத்துச்செல்ல காத்திருந்த ஒருவர், இளைஞர்களை கண்டித்தார்.
இதனால் ஆத்திரமுற்றவர்கள் அவரை தாக்கினர். ஆபாசமாக பேசி மிரட்டினர். கல்லுாரி வாசலில் நடந்த இச்சம்பவத்தால் பாதுகாப்பு கருதி மாணவியரை வெளியே விடாமல் சிறிது நேரம் கேட் பூட்டப்பட்டது. பின்னர் இளைஞர்கள் சென்றபிறகு மாணவியர் அனுப்பப்பட்டனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!