Load Image
Advertisement

டி.வி.ஆர்., பெயரில் விருது வழங்க கோரிக்கை குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை கோரிக்கை

Tamil News
ADVERTISEMENT


மதுரை:'தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பெயரில் இதழியல் விருது வழங்க வேண்டும்' என, மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்,தாய் தமிழகத்தோடு இணைந்த நாள், மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை சார்பில் கொண்டாடப்பட்டது.

குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க காரணமாக இருந்த 'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆர்., பெயரில், சிறந்த இதழ், இதழியலாளர்களுக்கு அரசு விருது வழங்க வேண்டும்.
Latest Tamil News

பல்கலைகளில் டி.வி.ஆர்., பெயரில் இதழியல் இருக்கை ஏற்படுத்த வேண்டும். நாகர்கோவிலில் முக்கிய சாலைக்கு அவரது பெயர் சூட்ட வேண்டும். அவரது பெயரில் அரசு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரை தினமலர் அலுவலக வளாகத்தில் உள்ள டி.வி.ஆர்., சிலைக்கு, பேரவை செயலர் சந்திரசேகர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

பத்திரிகையாளர் ப.திருமலை, குமரி மாவட்ட உருவாக்கத்தில் தினமலர் பங்கு குறித்து பேசினார். பொருளாளர் செல்வன், பேராசிரியர்பிரதீப் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து (1)

  • வேதவல்லி -

    வித்தகர் விருது வந்தால் மகிழ்ச்சி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement