ADVERTISEMENT
கோடம்பாக்கம்:சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் அமைக்கப்பட்ட 'கட் அவுட்' எனும் விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்பு சம்பவங்களும் நடந்தன.
இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது.ஆனால், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் பல இடங்களில் விளம்பர பலகைகள் முளைத்துள்ளன.
இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது.ஆனால், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் பல இடங்களில் விளம்பர பலகைகள் முளைத்துள்ளன.
குறிப்பாக, சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்தில், நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு, வடபழநி, அசோக் நகர், தி.நகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.இதில், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே உள்ள கட்டடங்களில் விளம்பர பலகை வரிசை கட்டுகின்றன. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகளோ கண்டுகொள்வதாக தெரியவில்லை. அசம்பாவிதங்கள் ஏற்படும்முன், அதிகாரிகள் விழித்துக்கொள்ள வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!