Load Image
Advertisement

அத்தியாவசிய மருந்து பட்டியலில் புற்றுநோய் மருந்துகள் சேர்ப்பு

 அத்தியாவசிய மருந்து பட்டியலில் புற்றுநோய் மருந்துகள் சேர்ப்பு
ADVERTISEMENT
புதுடில்லி: திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், புற்று நோய்க்கான மருந்துகள், நோய்த் தொற்றை தடுக்கும் மருந்துகள் உட்பட, புதிதாக, 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.


அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்படி, இந்தப் பட்டியலில் உள்ள மருந்துகளுக்கான விலையை மத்திய அரசே நிர்ணயிக்கும். இதனால் இவை மிக குறைந்த விலையில் கிடைக்கும்.


அந்த வகையில், 2022ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில், மொத்தம், 384 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. இதில் புதிதாக, 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் 'ஐவர்மெக்டின், முபுரோசின்' போன்ற நோய்த் தொற்றை தடுக்கும் மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Latest Tamil News
அதே நேரத்தில் 'ரேனிடிடைன், சுக்ரால்பேட், எரித்ரோமைசின்' உட்பட, 26 மருந்துகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மிகவும் விலை குறைந்த மாற்று மருந்துகள் கிடைப்பதால், இவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


'ரேன்டாக், ஜென்டாக்' போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளும் நீக்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகள், பக்கவிளைவாக புற்றுநோயை உருவாக்குவதாக பல நாடுகளில் பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து பட்டியலில் இருந்து இவை நீக்கப்பட்டுள்ளன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்