Load Image
Advertisement

பிரதமரை விமர்சிப்பவர்கள் கருத்து சுதந்திரமில்லை என அழுகிறார்கள்: மத்திய அமைச்சர்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: '' மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமரை தடையில்லாமல் விமர்சிப்பவர்கள், நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என அழுகிறார்கள்'', என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரிஜிஜூ கூறியுள்ளார்.


உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில், இன்றைய நிலைமை மோசமாக உள்ளது. நான் பொது இடத்தில் நின்று, பிரதமர் முகத்தை எனக்கு பிடிக்கவில்லை எனக்கூறினால், எனது வீட்டில் ரெய்டு நடக்கலாம். என்னை கைது செய்யலாம். எந்த காரணமும் சொல்லாமல் சிறையில் தள்ளலாம். இதனை குடிமகன் என்ற வகையில் எதிர்க்கிறேன் எனக்கூறியிருந்தார்.

Latest Tamil News
இதனை தொடர்ந்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பொது மக்கள், பெரும்பான்மையினரால் தேர்வு செய்யப்பட்ட பிரதமரை, எல்லா நேரமும் தடையின்றி விமர்சித்து விட்டு, கருத்து சுதந்திரம் இல்லை என அழுகிறார்கள். அவர்கள், காங்கிரஸ் அமல்படுத்திய அவசர நிலை பற்றி பேசமாட்டார்கள். சில பிராந்திய கட்சியை சேர்ந்த முதல்வரை விமர்சிக்க தைரியம் இருக்காது. ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர், மேற்கண்ட கருத்துகளை உண்மையாக சொன்னாரா எனக்கு தெரியாது. ஒரு வேளை அது உண்மையாக இருந்தால், அந்த அறிக்கையே அவர் பணியாற்றிய அமைப்பை இழிவுபடுத்துவதாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


வாசகர் கருத்து (24)

  • Tamilan - NA,இந்தியா

    அழுபவர்களுக்கு உணவு கொடுப்பதுதான் இந்து தர்மம், பாரம்பர்யம் . ,

  • DVRR - Kolkata,இந்தியா

    இதனை "குடி"மகன் என்ற வகையில் எதிர்க்கிறேன் எனக்கூறியிருந்தார் ஸ்ரீகிருஷ்ணா. 1)"குடி" மகன் டாஸ்மாக்கினாட்டில் இப்படித்தானே கூறவேண்டும். ,

  • DVRR - Kolkata,இந்தியா

    பிரதமரை விமர்சிப்பவர்கள் கருத்து சுதந்திரமில்லை என அழுகிறார்கள்: மத்திய அமைச்சர் இது 100% உண்மை. , எப்போதும் எதிலும் பிஜேபி மோடி அரசை குறை கூறுவதே இவர்கள் வாழ்க்கையின் அத்தியாவசியமான முக்கியமான மூலாதாரமான குறிக்கோள். தவறு யார் செய்தாலும் இது தவறு இதற்கு இந்த வழிமுறை சரியானது என்று வழிமுறை சொல்லாமலே வெறும் நீ தவறு நீ தவறு என்று சொல்வது,

  • venugopal s -

    ,2024 வரை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

  • Suri - Chennai,இந்தியா

    ஸ்ரீகிருஷ்ணர் கருத்துக்கு எதிர் கருத்து சொல்பவர்கள் எல்லோரும் ஆன்டி நஷனல்...ஆன்டி ஹிந்து....இவர்கள் தேசவிரோதிகளை...மிஷனரி கும்பல்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up