ADVERTISEMENT
ஆம்பூர்:ஆம்பூர் அருகே, பச்சகுப்பம் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதால், 25 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
திருப்பத்துார் மாவட்டம் முழுதும் மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், வாணியம்பாடி, ஆம்பூர் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், ஆம்பூர் அருகே பாலாற்றின் குறுக்கே உள்ள பச்சகுப்பம் தரைப்பாலம் நேற்று அதிகாலை,2:00 மணிக்கு வெள்ள நீரில் மூழ்கியது.இதனால், ஆம்பூரிலிருந்து செல்லும் பச்சகுப்பம், வெள்ளக்குட்டை, பேர்ணாம்பட்டு, வளத்துார் உள்ளிட்ட, 25 கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
திருப்பத்துார் மாவட்டம் முழுதும் மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், வாணியம்பாடி, ஆம்பூர் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், ஆம்பூர் அருகே பாலாற்றின் குறுக்கே உள்ள பச்சகுப்பம் தரைப்பாலம் நேற்று அதிகாலை,2:00 மணிக்கு வெள்ள நீரில் மூழ்கியது.இதனால், ஆம்பூரிலிருந்து செல்லும் பச்சகுப்பம், வெள்ளக்குட்டை, பேர்ணாம்பட்டு, வளத்துார் உள்ளிட்ட, 25 கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அப்பகுதி மக்கள், 50 கி.மீ., சுற்றி, குடியாத்தம், பள்ளிகொண்டா வழியாக ஆம்பூர் செல்கின்றனர். ஏற்கனவே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாதனுார் பாலாற்று தரைப்பாலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இப்பாலமும் உடையும் நிலையில் உள்ளதால், அதை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!