ADVERTISEMENT
சென்னை-தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக, அகஸ்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு,
முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் கன்னியாகுமரி வன உயிரின காப்பகப்
பகுதிகளை உள்ளடக்கிய அகஸ்திய மலை, யானைகளின் புகலிடமாக உள்ளது.எனவே,
அப்பகுதியை யானைகள் காப்பகமாக அறிவிக்கும்படி, மத்திய அரசுக்கு பரிந்துரை
செய்யப்பட்டது. அதை ஏற்று அகஸ்தியமலை பகுதியை யானைகள் காப்பமாக, மத்திய
அரசு அறிவித்துஉள்ளது.
இது, தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகம்.இதில், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், ஆழ்வார்குறிச்சி, சிங்கம்பட்டி, மன்போதை, கொழுந்துமாமலை, திருக்குறுங்குடி, களக்காடு, வனமுட்டி, மகேந்திரகிரி, நடுகாணி, வள்ளியூர் வனப்பகுதிகள் அடங்கும்.அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம், விளவன்கோடு, திருவெட்டாறு, தோவாளை வனப் பகுதிகளும் அடங்கும்.
மொத்தம், 1,197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வனப் பகுதி, யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வன பாதுகாப்பாளர் மற்றும் கள இயக்குனர், அகஸ்திய மலை யானைகள் காப்பகம் கள ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இதற்கான அர சாணையை, வனத் துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ளார்.இவ்விபரம் தமிழக அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!