Load Image
Advertisement

ஸ்டெர்லைட் ஆலை மூடலால் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு

துாத்துக்குடியில் இயங்கி வந்த, 'ஸ்டெர்லைட்' ஆலை மூடப்பட்டதால், இந்தியாவுக்கு மூன்று ஆண்டுகளில் மட்டும், 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஜெய்ப்பூரைச் சேர்ந்த, 'கட்ஸ் இன்டர்நேஷனல்' என்ற, அரசு சாரா அமைப்பு தெரிவித்து உள்ளது.

உச்ச நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் அளித்துள்ள தீர்ப்புகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவுகள் என்ன என்பதை, இந்த அமைப்பு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. விரிவான ஆய்வுஇவ்விரு அமைப்புகளும் வழங்கிய ஐந்து தீர்ப்புகளின் விளைவுகளை பற்றி விரிவான ஆய்வை, இந்த அமைப்பு செய்து உள்ளது.

குறிப்பாக, 2018 மத்தியில் இருந்து, 2021 மத்தி வரையான காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளே கணிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வைச் செய்யச் சொன்னது, மத்திய அரசின் ஓர் அங்கமான நிடி ஆயோக். அந்த அமைப்பு அளித்த நிதி உதவியை வைத்து, 'கட்ஸ் இன்டர்நேஷனல்' இந்த ஆய்வைச் செய்துள்ளது.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஐந்து தீர்ப்புகளில் ஒன்று தான், ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு. அதில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின், துாத்துக்குடி, தமிழகம், இந்தியா மட்டுமல்ல; தாமிரத் தொழில் துறை, மக்கள் ஆகியோர் எவ்வளவு இழப்புகளை சந்தித்துள்ளனர் என்று விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு தரவுகளை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் இறுதியில், இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பு



அதில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2018 மத்தியில் இருந்து 2021 மத்தி வரையிலான, மூன்று ஆண்டு காலத்தில் குறைந்தபட்சம் 75 ஆயிரம் மக்கள் கடுமையாக பொருளாதார பாதிப்புகளை சந்தித்துள்ளனர். 16 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அரசுக்கு 8,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தொகை திரட்டப்பட்டு, மூலதன செலவினங்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தால், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி பணிகள் நடந்திருக்கும். இந்த தொழிற்சாலை அடைந்த இழப்பு மட்டும், 7,000 கோடி ரூபாய். பொது மக்கள் 500 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை இழந்தனர். மொத்தத்தில், 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் --



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement