ADVERTISEMENT
பரிதாபாத்: இந்தியாவில் மருத்துவமும் ஆன்மிகமும் ஒன்றிணைந்தது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஹரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் அம்ரிதா பன்னோக்கு அதிநவீன சிறப்பு மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் மருத்துவமும் ஆன்மிகமும் ஒன்றிணைந்தது. கோவிட் தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமாக நடந்ததற்கு ஆன்மிக - தனியார் கூட்டாண்மை ஒரு எடுத்துக்காட்டு. இது விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை செயல்படுத்தவும் உதவியது.

தடுப்பூசி திட்டத்தின்போது, சிலர் தவறான பிம்பத்தை பரப்பினர். ஆனால் நமது ஆன்மிகத் தலைவர்கள் அதை எதிர்த்து கூறியபோது, மக்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சுகாதாரத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றின் கலவையானது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்
பூஜ்ஜிய கழிவு நீர் வெளியேற்றத்துடன் கூடிய உயர்தர வசதிகள் உள்ளன, விரைவில் சூரிய சக்தியில் இயங்கும். .
"மருத்துவமனையானது ஏழு மாடிக் கட்டிடத்தில் பிரத்யேகமான ஆராய்ச்சித் தொகுதியைக் கொண்டிருக்கும். மொத்தம் மூன்று லட்சம் சதுர அடியில் கிரேடு A முதல் D வரை GMP ஆய்வகங்கள் உள்ளன.
இந்தியாவில் மிகப்பெரிய மருத்துவமனை இது என அழைக்கப்படுகிறது.
வாசகர் கருத்து (19)
ஜாதி மதம் ஆன்மீகம் எல்லாம் ஒன்றாக கலந்து இருக்கிறது
இரண்டும் என்றுமே ஒன்று சேராது.
,,,,
.....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இந்த மாதிரி ஆஸ்பத்திரிகள் இருக்கும்போதே அன்னை சோனியா மருத்துவ பரிசோதனைக்கு வெளிநாடு செல்கிறார் .