சென்னை: அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, திமுக குறித்து காட்டமான கருத்தை முன்வைத்தார். தலைமை நீதிபதியின் கருத்தை திமுக எம்.பி., செந்தில்குமார் விமர்சித்துள்ளார். இது சர்ச்சையாகியுள்ளது.

தலைமை நீதிபதியின் இந்த கருத்தை தர்மபுரி லோக்சபா தொகுதி திமுக எம்.பி., செந்தில்குமார் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், ‛ஆம். சமூகநீதி ஆட்சி மூலம் இதை சாதித்து, தரவுகள் மூலம் நிரூபித்து காட்டிய கட்சி திமுக மட்டுமே. இதில் என்ன சந்தேகம், My UnLords' என விமர்சித்துள்ளார். நீதிபதியை ‛லார்ட்' என்று குறிப்பிடாமல் அதற்கு எதிர் பதத்தில் ‛அன் லார்ட்ஸ்' என்று குறிப்பிட்டு திமுக எம்.பி., குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர், ‛உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படாத வரை, அவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் முற்பட்ட சாதியினராக இருந்தனர். சமூகநீதி மற்றும் மக்கள் நலன் நடவடிக்கைகளுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்போம். கருணாநிதியின் முயற்சியால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தின் முதல் தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நீதிபதிகளாகினர்' எனவும் விமர்சித்திருந்தார்.
சாதி அடிப்படையிலான இவரின் விமர்சனத்திற்கு பா.ஜ.,வின் நாராயணன் திருப்பதி பதிலளிக்கையில், ‛நீதிபதிகள் குறித்து கருத்து தெரிவிப்பது குற்றமாகும். சாதியின் பெயரால் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த இந்த பார்லி., உறுப்பினர் தண்டிக்கப்பட வேண்டும்' என்றார். இதனையும் விமர்சித்த திமுக எம்.பி., செந்தில்குமார், ‛செய்யுங்கள்.. முடிந்தால் தொட்டு பாருங்கள்' என தெரிவித்துள்ளார். செந்தில்குமாரின் இந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பூமி பூஜைக்கு எதிராக பேசியவர்
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பாக, அரசு திட்டத்திற்கான பூமி பூஜையில் ஹிந்து சமுதாயத்தை மட்டுமின்றி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ பாதிரியார்களை மற்றும் கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து இது போன்ற பணியை துவங்க வேண்டும் எனக்கூறி பூமி பூஜைக்கு எதிராக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (69)
t ......
நீதிமன்றத்தை இவ்வாறு விமர்சிப்பது தவறான முன்னுதா ரனமாகிவிடும். அவர் சரி என்று நினைத்தால் சட்ட மன்றத்திலோ / மக்களவையிலோ தீர்மானம் நிறைவேற்றட்டும். இவ்வாறு பேசுவதை திமுகவினர் தவிர்ப்பது அவர்களுக்கு நல்லது.
In this issue, what PTR says is correct only. In democracy , people are supreme. When someone has people's mandate who else can question? If they don't perform up to the expectations, people will punish them through votes.
இவரை சொல்ல தூண்டுவதே மேலிடம்தான் இது போல் பழைய தலைவரும் ஒரு பக்கம் சிக்கலிகள் செய்ய விட்டு எதுவும் தெரியாதது போல் இருப்பார் ..சுளுக்கு எடுப்பது ஒன்றே தீர்வு ..வெங்காயங்களை.
தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஒட்டு போட்ட தருமபுரியில் உள்ளனர்