Load Image
Advertisement

தோல்வியில் முடிந்த புதிய முயற்சி: 2 செயற்கைகோள்கள் செயல்பட முடியாது; இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: குறைந்த எடை கொண்ட 2 செயற்கைகோள்களை சுமந்து எஸ்எஸ்எல்வி -டி1 ராக்கெட் இன்று (ஆக., 07) காலை 9.18 மணியளவில் விண்ணில் பாய்ந்தது. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததாக முதலில் அறியப்பட்டது. ஆனால் திடீரென செயற்கைகோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. 2 செயற்கைகோள்களையும் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை. நீள் வட்டப்பாதையில் நிறுதப்பட்டடதால் இதனை பயன்படுத்த முடியாது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இது வரை அதிக எடை கொண்ட செயற்கைகோள்களே சுமந்து சென்ற நிலையில் தற்போது மிக குறைந்த எடை கொண்ட செயற்கைகோள் அனுப்பும் பணியை இஸ்ரோ துவக்கி இருக்கிறது.



Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Latest Tamil News
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் மைதானத்தில் இருந்து விண்ணிற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பியது. இதுவரை பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது இஸ்ரோ. இதில் பிஎஸ்எல்வி 1,860 கிலோ , ஜிஎஸ்எல்வி 4 ஆயிரம் கிலோ வரை எடையை சுமந்து செல்லும். எஸ்எஸ்எல்வி மிக குறைந்த 500 கிலோ வரையிலான எடை கொண்ட செயற்கைகோளை சுமந்து செல்லும்.
Latest Tamil News


750 பேர் கொண்ட மாணவிகள் குழு





இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் 145 கிலோ எடை கொண்ட இஓஎஸ்2 , இது பூமியை கண்காணிக்க உதவும் . 8 கிலோ கொண்ட ஆசாதிசேட் செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. ஆசாதிசேட் கல்விசார்ந்த ஒன்றாகும். இதனை 750 பேர் கொண்ட மாணவிகள் குழுவினர் தயாரித்துள்ளனர்.

இது வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் விண்ணில் இந்தியா அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.


இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், விண்ணுக்கு அனுப்பிய 2 செயற்கைகோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை. தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். 47 நிமிடங்கள் கடந்துவிட்ட போதிலும் தற்போது வரை சிக்னல் வரவில்லை என்றார். இதனால் செயற்கைகோள்களுக்கு என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.


இந்நிலையில், இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை:செயற்கைகோள்கள் 356 கி.மீ., சுற்றுவட்டப்பாதைக்கு பதில், 356 கி.மீ., * 76 கி.மீ., நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இனிமேல் அந்த செயற்கைகோள்களை பயன்படுத்த முடியாது. பிரச்னைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. சென்சார் செயலிழப்பை கண்டறிந்து, மீட்பு நடவடிக்கைக்கு செல்ல நடவடிக்கையின் போது பாதை மறியது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன் பரிந்துரை அடிப்படையில் எஸ்எஸ்எல்வி-டி2 செயற்கைகோளுடன் இஸ்ரோ மீண்டும் வரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (18)

  • அப்புசாமி -

    எல்லாம் அந்த நேருதான் காரணம். நாங்க ஆட்சிக்கு வந்திருந்தால் 1950 லேயே நிலாவைப் புடிச்சிருப்போம். செவ்வாயில் ல்லோருக்கும் வூடு குடுத்திருப்போம்.

  • பைரவர் சம்பத் குமார் -

    முயற்சி திருவினையாக்கும், அடுத்த முயற்ச்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி வணக்கம் ஐயா.

  • Dharmavaan - Chennai,இந்தியா

    இது ஒரு புத்தி கொள்முதல்

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    அடுத்தமுறை நம்பி நாராயணன் ஐயாவின் ஆலோசனைகளை பெற்று ராக்கெட் விடுங்கள்...

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    அனுபவம் நிச்சயம் அடுத்த முறை பலன்தரும். நல்ல முயற்சிக்கு பாராட்டுகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்