Load Image
Advertisement

மோடிக்கு குவிந்த கடிதங்கள்

புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக சென்னை வந்து, செஸ் ஒலிம்பியாட் மற்றும் அண்ணா பல்கலை விழாவில் பங்கேற்று டில்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.பிரதமர் அலுவலகத்திற்கு, 8,000க்கும் மேற்பட்ட 'இ - மெயில்'கள் மற்றும் தபால் கார்டுகள் தமிழகத்திலிருந்து வந்துள்ளதாம்.
Latest Tamil News


இவை அனைத்தும் தமிழில் உள்ளதாம்.'தமிழக மக்கள் என் மீது இவ்வளவு பாசமாக இருக்கின்றனரே' என மோடி சந்தோஷப்பட்டாராம். இந்த இ - மெயில் மற்றும் கடிதங்களில் உள்ள விபரங்கள் அனைத்தையும் படித்து தனக்கு ஒரு 'ரிப்போர்ட்' தர ஏற்பாடு செய்துள்ளாராம் மோடி.இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
Latest Tamil News

இந்த குழுவில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் உள்ளாராம். இந்தக் குழு அனைத்து கடிதங்களையும் படித்து அதில் உள்ள சாராம்சத்தை பிரதமருக்கு தெரியப்படுத்த உள்ளதாம்.சமீபத்திய சென்னை விசிட்டை அடுத்து, பிரதமர் மதுரைக்கு வர திட்டமிட்டுள்ளாராம். அடுத்த ஓரிரு மாதங்களில் அவர் மதுரைக்கு வருவார் என்கின்றனர், பிரதமர் அலுவலக அதிகாரிகள்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்