ADVERTISEMENT
அவிநாசி:அவிநாசி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள ஸ்ரீநாகதேவி அம்மன் கோவிலில், 35ம் ஆண்டு ஆடிப்பெருக்கு திருவிழா நடந்தது.கடந்த மாதம் 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கிய, திருவிழாவில், தீர்த்த குட ஊர்வலம், அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அக்னிச்சட்டி எடுக்கும் திருவிழா ஆகியன நடைபெற்றது.விழாவில், படைக்கலம் மற்றும் திருக்கல்யாணம் ஆகியன நடைபெற்றது. முன்னதாக, நேற்று முன்தினம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பால் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக நாகதேவி கோவிலுக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.திருவிழாவில், இன்று பொங்கல் வைத்தல் வழிபாடு நடத்தப்படுகிறது. நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.விழா நடைபெறும் நாட்களில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!