பைக்கில் சென்றவர் மயங்கி விழுந்து சாவு
செஞ்சி-செஞ்சி அருகே பைக்கில் சென்றவர் மயக்கமடைந்து இறந்தார்.விழுப்புரம் அடுத்த ஏழுசெம்பொன் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 64; இவர், கடந்த 3ம் தேதி காலை பைக்கில் சென்று கொண்டிருந்தார். அன்னியூர் ஏரிக்கரை அருகே சென்றபோது, திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.தலையில் படுகாயமடைந்த அவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு இறந்தார்.கஞ்சனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!