58 பெண்களுக்கு நலத் திட்ட உதவி
பாகூர்-பாகூர் தொகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு, செந்தில் குமார் எம். எல். ஏ., நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பாகூர் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.நிகழ்ச்சியில் பாலுாட்டும் தாய்மார்கள் 36 பேர், தொடர் நோய் சிகிச்சை பெறும் 22 பேர் என மொத்தம் 58 பேருக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை செந்தில்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.நிகழ்ச்சியில், தி.மு.க., தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன், மணிவண்ணன், அரி, கிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!