விநாயகர் சதுர்த்தி விழா: 1.25 லட்சம் சிலைகள் தயார்!
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழகம் முழுவதும், ஹிந்து முன்னணி சார்பில், 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
![Latest Tamil News]()
ஈரோடு மற்றும் பவானிசாகரிலும் இப்பணி நடக்கிறது. தொடர்ந்து, சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இப்பணி முழுமையாக நிறைவு பெற்ற பின், அடுத்த வாரத்தில், அந்தந்த பகுதிகளுக்கு அனுப்ப தயாராக உள்ளது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:
கோவையில் 6 ஆயிரம், திருப்பூரில் 5 ஆயிரம் உட்பட, தமிழகம் முழுவதும், 1.25 லட்சம் இடங்களில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கொரோனா காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு பின், விநாயகர் ஊர்வலம் நடக்க உள்ளதால் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். வரும் 31ம் தேதி முதல், செப்., 4ம் தேதி வரை கொண்டாட உள்ளோம்.
செப்., 3ம் தேதி, திருப்பூர் மாநகரம், ஈரோடு, பொள்ளாச்சி, 4ம் தேதி கோவை, நீலகிரியில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.திருப்பூர் விசர்ஜன ஊர்வலத்தில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும், கோவையில், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவும் பங்கேற்க உள்ளனர். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா, 'பிரிவினை வாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம்' என்ற தலைப்போடு கொண்டாடப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, பண்ருட்டி, கடலுார், அரசூர் ஆகிய இடங்களில், சில மாதங்களாக நடந்து வந்தது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், காகிதக்கூழ், கிழங்கு மாவு வாயிலாக தயாரிக்கப்பட்ட சிலை பாகங்கள், திருப்பூர் மாவட்டம் அலகுமலை மற்றும் கொடுவாய் அருகே கொண்டு வரப்பட்டு, அவற்றைப் பொருத்தும் பணி நடக்கிறது.
ஈரோடு மற்றும் பவானிசாகரிலும் இப்பணி நடக்கிறது. தொடர்ந்து, சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இப்பணி முழுமையாக நிறைவு பெற்ற பின், அடுத்த வாரத்தில், அந்தந்த பகுதிகளுக்கு அனுப்ப தயாராக உள்ளது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:
கோவையில் 6 ஆயிரம், திருப்பூரில் 5 ஆயிரம் உட்பட, தமிழகம் முழுவதும், 1.25 லட்சம் இடங்களில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கொரோனா காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு பின், விநாயகர் ஊர்வலம் நடக்க உள்ளதால் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். வரும் 31ம் தேதி முதல், செப்., 4ம் தேதி வரை கொண்டாட உள்ளோம்.
செப்., 3ம் தேதி, திருப்பூர் மாநகரம், ஈரோடு, பொள்ளாச்சி, 4ம் தேதி கோவை, நீலகிரியில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.திருப்பூர் விசர்ஜன ஊர்வலத்தில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும், கோவையில், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவும் பங்கேற்க உள்ளனர். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா, 'பிரிவினை வாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம்' என்ற தலைப்போடு கொண்டாடப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!