Load Image
Advertisement

கனமழையால் மின் நுகர்வு சரிவு

  கனமழையால் மின் நுகர்வு சரிவு
ADVERTISEMENT
சென்னை-தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் கன மழையால், தமிழக மின் நுகர்வு, 30 கோடி யூனிட்களாக சரிந்துள்ளது.தமிழகம் முழுதும் ஒரு நாள் அதாவது, 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது.


@1brதினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்கள் என்றளவில் உள்ள மின் நுகர்வு, கோடை காலத்தில் அதிகரிக்கிறது.அதன்படி, நடப்பாண்டு ஏப்., 29ல் மின் நுகர்வு, 38.80 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது. ஜூலையில் மின் நுகர்வு தினமும் சராசரியாக, 35 கோடி யூனிட்களாக இருந்தது.



அம்மாதத்தில் அதிக அளவாக, 5ம் தேதி, 35.15 கோடி யூனிட்களாக இருந்தது.ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்கிறது. இதனால், இம்மாதம் 1ம் தேதி, 30.31 கோடி யூனிட்கள்; 2ல், 30.89 கோடி யூனிட்கள் என, மின் நுகர்வு சரிந்துள்ளது. இது, மழை தொடரும் பட்சத்தில் மேலும் குறையும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement