Load Image
Advertisement

நிலத்தடி நீருக்கு கட்டணம்: மத்திய அரசின் திட்டம் தமிழகத்திற்கு பொருந்தாது

Tamil News
ADVERTISEMENT

சென்னை: நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


இந்தியா முழுவதும் நிலத்தடி நீரை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துபவர்கள் கட்டயாம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள், உட்கட்டமைப்பு, இண்டஸ்டரியல், மொத்த தண்ணீர் சப்ளை ஏஜென்சிகள், குரூப் ஹவுசிங் சொசைடிகள், குடியிருப்பு அபார்ட்மென்ட்களுக்கான குடிநீர் மற்றும் வீட்டு பயன்பாட்டு உள்ளிட்ட எல்லா நிலத்தடி நீர் பயன்படுத்துவர்கள், தற்போது அல்லது புதிய நீலத்தடி நீர் பயன்பாட்டளர்கள் ஜூன் 30க்குள் அனுமதி பெற வேண்டும்.

Latest Tamil News
செப்டம்பர் 30க்குள் பூர்த்தி அடைந்த விண்ணப்பம் சமர்பிப்பதற்கு ரூ.10 ஆயிரம் பதிவு கட்டணம் செலுத்துவதின் பேரில் நிலத்தடி நீர் எடுப்பதை பதிவு செய்வதற்கு இதன் மூலம் தற்போதைய பயனாளிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆணையத்திடம் அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் தொடர்ந்து எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


வாசகர் கருத்து (43)

  • SURESH M - madurai,இந்தியா

    இந்த பணத்தை வைத்து என்ன செய்யப்போறார்களாம் ....... எல்லாமே கல்லாவுக்கு தானா ? இல்ல மலை நீர் சேகரிப்பு குளம் ஏறி தூர்வாருதலுக்கு பயண படுமா? முதலில் குளத்தை மீன் குத்தகைக்கு விடுவதை தவிர்க்க சொல்லுக

  • DVRR - Kolkata,இந்தியா

    இது தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்று மத்திய அரசு சரியாகச்சொல்லி இருந்ததே. அதுக்கப்புறம் என்ன குழப்பம்

  • Shekar - Mumbai,இந்தியா

    நம்ம நான் அவனில்லை அமைச்சர் நிலத்தடிநீரை அனுமதி இல்லாமல் உறிஞ்சி, குடிநீர் பாட்டிலாய் விற்கிறார். என்ன தயா அமைச்சர் விவசாய நிலத்தில் நீரை உறிஞ்சி சோமபானமாக விற்கிறார். இதற்கெல்லாம் ஒரு விடியல் வராதா?

  • TRUBOAT - Chennai,இந்தியா

    நல்ல வேலை மூச்சு விடுவதற்கு இன்னும் வரி / கட்டணம் விதிக்கவில்லை... நாம் கொடுத்து வைத்தவர்கள் தான்... இந்த புது சட்டம் அமல் படுத்துவதில் சிக்கல்கள் இருக்கலாம். அனாவசிய நீர் உபயோகத்தை தடுக்க அறிவியல் ரீதியாக ஒரு தீர்வு வேண்டும்.

  • Sukumar R -

    Total population of India is nearly 1300 million. And number of borewells is nearly 30 million. Almost we have one borewell for every 45 people. This is alarming. One day country will go dry very soon.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்