புதுடில்லி: விமானப்படையில், 'அக்னிபத் ' திட்டத்தின் கீழ் சேர 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த காலங்களில் இருந்த நடைமுறைகளின் போது பெறப்பட்ட விண்ணப்பங்களை விட தற்போது தான் சாதனை படைக்கும் அளவுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்திய முப்படைகளில், நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதற்கான வயது வரம்பு 17.5 முதல் 21 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கோவிட் காரணமாக 2 ஆண்டுகள் ஆட்கள் தேர்வு நடக்காத காரணத்தினால், இந்த ஆண்டு உச்ச வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு வட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும், இந்த திட்டத்தின் கீழ் ஆட்களை சேர்க்கும் நடவடிக்கையை இந்திய விமானப்படை கடந்த 24ம் தேதி துவக்கியது. அன்று முதல், ஏராளமானோர் ஆர்வமுடன் விண்ணப்பிக்க துவங்கினர்.

இந்நிலையில் விமானப்படை வெளியிட்ட அறிக்கை: விமானப்படையில் அக்னிவீரர்களாக சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது. கடந்த காலங்களில் விமானப்படையில் சேர்வதற்கு வந்த விண்ணப்பங்களில் அதிகபட்சமாக 6,31,528 ஆக இருந்தது. ஆனால், இந்த முறை சாதனை படைக்கும் அளவாக 7,49,899 பேர் அக்னிபத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் விமானப்படை கூறியுள்ளது.
வாசகர் கருத்து (26)
எனக்கு ஒரு 'அல்ப ஆசை'. விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை கிடைக்குமானால், உலகத்திலேயே இந்தியாதான் மிக வலுவான வீரர்கள் உடைய நாடாக இருக்கும். சீனா, முதற்கொண்டு எல்லா நாடுகளும் நம்மை கண்டால் பயப்படும். ஏன், நம் நாட்டில் உள்ள, நம் நாட்டு உணவை, நம் நாட்டில் கிடைக்கும் உப்பை போட்டு தின்று, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தேசதுரோகிகளும் பயப்படுவார்கள்.
ஒரு 50000 பணியிடங்களுக்கு 21, 23 வயதுக்குட்பட்டவர்கள் 7.5 லட்சம் பேர் விண்ணப்பமாம்
என்னடா இது குடும்ப கொத்தடிமைகளுக்கு வந்த சோதனை?
விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேரட்டும், இல்லாதவர்கள் வேறு வேலை தேடி கொள்ளட்டும், சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இந்திய இளைனர்கள் அனைவரும் அரசு உத்தியோகத்தில்தான் சேர்ந்தார்களா ,எந்த அரசு வந்தாலும் அரசாங்க வேலை என்பது லடசம் பேரில் ஒரு அஞ்சு பேருக்குத்தான் என்பது கூடவா தெரியாது மக்களுக்கு, நாம் உழைக்கிறோம் நாட்டில் வாழ்கிறோம், நம்மை அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் அரசு ஊழியர்கள் கூத்தாடிகள் சுரண்டி சாப்பிட்டு வாழ்கிறார்கள் நாம் தெரிந்தும் தெரியாத குழந்தை நடக்கவேண்டும், தட்டிக்கேட்டால் இவன் ஒரு மெண்டல் என்று பட்டம் கொடுப்பர்.
இனி கொத்தடிமைக்கு ஆள் கிடைக்காது .....