மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ
பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது, போக்சோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை அடுத்த நாகசமுத்திரத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், 22; பொக்லைன் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர், திப்பம்பட்டியை சேர்ந்த, 15 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும், வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புகார்படி, கிருஷ்ணாபுரம் போலீசார் மாணவியை தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் மாணவியுடன், தன் வீட்டுக்கு வந்த சிலம்பரசனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். மாணவியின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரும் வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். அவர்களை உறவினர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும், சிகிச்சை பெற்று வரும் நிலையில், கிருஷ்ணாபுரம் போலீசார் சிலம்பரசன் மீது, போக்சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை அடுத்த நாகசமுத்திரத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், 22; பொக்லைன் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர், திப்பம்பட்டியை சேர்ந்த, 15 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும், வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புகார்படி, கிருஷ்ணாபுரம் போலீசார் மாணவியை தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் மாணவியுடன், தன் வீட்டுக்கு வந்த சிலம்பரசனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். மாணவியின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரும் வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். அவர்களை உறவினர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும், சிகிச்சை பெற்று வரும் நிலையில், கிருஷ்ணாபுரம் போலீசார் சிலம்பரசன் மீது, போக்சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!