ADVERTISEMENT
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூன் 23) 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று, பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரமாக பதிவானது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,336 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,33,62,294 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 13,029 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,27,49,056 ஆனது. தற்போது 88,284 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கோவிட் காரணமாக 13 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,954 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 196.77 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 13,71,107 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,336 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,33,62,294 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 13,029 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,27,49,056 ஆனது. தற்போது 88,284 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

எந்த வியாதி வந்தாலும் அது கொரோனா தானா?கோடை முடிந்து இப்போ ஆங்காங்கே மழை.ஃப்ளு வைரஸ் மூலம் காய்ச்சல் வரத்தான் செய்யும்.