பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு
கடலுார், : அரசு பொதுத்தேர்வில் சாதித்த பிராமணர் சமூக மாணவ மாணவியர் பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில செயலாளர் திருமலை விடுத்துள்ள அறிக்கை:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிராமணர் சமூக மாணவ, மாணவியருக்கு பிராமணர் சங்கம் சார்பில் பரிசு வழங்கப்பட உள்ளது.
பரிசு பெற விரும்பும் கடலுார் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், திருவந்திபுரம், சாவடி, துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பிராமணர் சமூக மாணவ, மாணவியர் தங்களின் விவரங்களை, எண், 64, பாஷ்யம் ரெட்டித்தெரு, மஞ்சக்குப்பம், கடலுார் என்ற முகவரிக்கு கடிதம் மூலம் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!