ஜி.எச்., வளாகத்தில் வாலிபர் சடலம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், இறந்தவர் குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், ஒருவர் இறந்து கிடப்பதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.போலீசார் கூறுகையில், 'அரசு மருத்துவமனை வளாகத்தில், அசைவின்றி கிடந்த நபரை, துாய்மை பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர். பரிசோத்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விசாரணையில், ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்த கந்தகுமார்,39 என்பது தெரியவந்துள்ளது. எதற்காக அரசு மருத்துவமனைக்கு வந்தார்; தற்கொலை செய்து கொண்டரா; இயற்கை மரணமா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியும்,' என்றனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், ஒருவர் இறந்து கிடப்பதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.போலீசார் கூறுகையில், 'அரசு மருத்துவமனை வளாகத்தில், அசைவின்றி கிடந்த நபரை, துாய்மை பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர். பரிசோத்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விசாரணையில், ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்த கந்தகுமார்,39 என்பது தெரியவந்துள்ளது. எதற்காக அரசு மருத்துவமனைக்கு வந்தார்; தற்கொலை செய்து கொண்டரா; இயற்கை மரணமா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியும்,' என்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!