மனைவியுடன் சண்டை:கணவர் கொலை
மானாமதுரை:மானாமதுரையில், குடும்பத் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் சுரேஷ், 40. இவர், அப்பகுதியில் 'டூ வீலர்' பஞ்சர் பார்க்கும் கடை நடத்தினார்.இவருக்கும், மனைவி மலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
நேற்று மாலையும் பிரச்னை ஏற்பட்டது.தொடர்ந்து இரவு, 7:30 மணிக்கு கலைச்செல்வியின் உறவினர்கள் கணேசன், 30, கார்த்திக், 28, ஆகியோர் சுரேஷின் கடைக்கு வந்து அவரை கத்தியால் குத்தினர்.பலத்த காயமடைந்த சுரேஷ், மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கணேசன், கார்த்திக்கை மானாமதுரை போலீசார் தேடுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் சுரேஷ், 40. இவர், அப்பகுதியில் 'டூ வீலர்' பஞ்சர் பார்க்கும் கடை நடத்தினார்.இவருக்கும், மனைவி மலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
நேற்று மாலையும் பிரச்னை ஏற்பட்டது.தொடர்ந்து இரவு, 7:30 மணிக்கு கலைச்செல்வியின் உறவினர்கள் கணேசன், 30, கார்த்திக், 28, ஆகியோர் சுரேஷின் கடைக்கு வந்து அவரை கத்தியால் குத்தினர்.பலத்த காயமடைந்த சுரேஷ், மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கணேசன், கார்த்திக்கை மானாமதுரை போலீசார் தேடுகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!