தகராறில் ஒருவர் கொலை
மானாமதுரை:சிவகங்ககை மாவட்டம் மானாமதுரையில் குடும்பத்தகராறில் சுரேஷ் 40, என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
மானாமதுரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் சுரேஷ். இவர் அப்பகுதியில் டூ வீலர் பஞ்சர் பார்க்கும் கடை நடத்தினார். இந்நிலையில் இவருக்கும் மனைவி மலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலையும் பிரச்னை ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு கலைச்செல்வியின் சகோதரர்கள் சோமாத்தூர் கருணாநிதி மகன் கணேசன் 30, மானாமதுரை உடைகுளம் பகுதி கண்ணன் மகன் கார்த்திக் 28, ஆகிய இருவரும் சுரேஷின் கடைக்கு வந்து அவரை கத்தியால் குத்தினர். பலத்த காயமடைந்த சுரேஷ் ,மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கணேசன், கார்த்திக்கை மானாமதுரை போலீசார் தேடுகின்றனர்.
மானாமதுரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் சுரேஷ். இவர் அப்பகுதியில் டூ வீலர் பஞ்சர் பார்க்கும் கடை நடத்தினார். இந்நிலையில் இவருக்கும் மனைவி மலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலையும் பிரச்னை ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு கலைச்செல்வியின் சகோதரர்கள் சோமாத்தூர் கருணாநிதி மகன் கணேசன் 30, மானாமதுரை உடைகுளம் பகுதி கண்ணன் மகன் கார்த்திக் 28, ஆகிய இருவரும் சுரேஷின் கடைக்கு வந்து அவரை கத்தியால் குத்தினர். பலத்த காயமடைந்த சுரேஷ் ,மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கணேசன், கார்த்திக்கை மானாமதுரை போலீசார் தேடுகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!