ADVERTISEMENT
பொன்னேரி, :நீதிமன்ற உத்தரவை அடுத்து, காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 50 கோடி ரூபாய் மதிப்பிலான, 14.50 ஏக்கர் நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டன.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சைனாவரம் கிராமத்தில், காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 14.50 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. அதை மீட்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் லட்சு மணன், திருவள்ளூர் உதவி ஆணையர் சித்ராதேவி ஆகியோர் முன்னிலையில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.இதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்கள் இருவர் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார்மீட்டனர்.'கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருவதாகவும், திடீரென வீடுகள் இடிக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும்' என, அவர்கள் தெரிவித்தனர்.அங்கு வந்த பொன்னேரி எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசி, கால அவகாசம் பெற்று கொடுத்தனர். இதனால் வீடுகள் இடிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.கோவில் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இரண்டு கடைகள் இடிக்கப்பட்டன. 12 கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன.விவசாய நிலங்கள் மீட்கப்பட்டு, கோவில் நிலம் என்பதற்கான பதாகைகள் வைக்கப்பட்டன.மேற்கண்ட கோவிலுக்கு சொந்தமான, 50 கோடி ரூபாய் மதிப்பிலான 14.50 ஏக்கர் நிலங்கள்ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!