38 ஆயிரம் நபர்களின் நகைக் கடன் தள்ளுபடியை ரத்து செய்ய உத்தரவு
சென்னை:அரசு நிபந்தனைக்கு மாறாக தள்ளுபடி செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் உட்பட, 37 ஆயிரத்து 984 பேரின் நகை கடன் தள்ளுபடியை ரத்து செய்யுமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 5 சவரன் வரை வழங்கப்பட்ட, நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.
நிபந்தனைகள்
இதையடுத்து, 2021 மார்ச் 31 வரை, நகை கடன் பெற்றவர்களில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய, 2021 நவ., 1ல் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.அதில், 'பயிர்க் கடன் தள்ளுபடியில் பயன் பெற்றவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நகைக் கடன் தள்ளுபடி பெற தகுதியில்லை' உட்பட பல்வேறு நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தன.அதன் அடிப்படையில், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய, வங்கிகளில் தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டன. இறுதியாக, 14.50 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் பெற்ற, 6,000 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது.
இறுதி கட்டம்
தேர்வான பயனாளிகளிடம் நடப்பாண்டு பிப்., இறுதியில் இருந்து, கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகைகள் திரும்ப வழங்கும் பணி துவங்கியது. அந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக, கூட்டுறவு தணிக்கை இயக்குனர் அலுவலக அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். அதில், அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என, 37 ஆயிரத்து 984 கடன்தாரர்கள் தகுதியற்றவர்களாக கண்டறிப்பட்டு உள்ளனர்.
சான்று
எனவே, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அசல் மற்றும் வட்டி தொகையான, 160 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யக் கூடாது என, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தகுதியற்ற கடன்தாரர்களுக்கு தள்ளுபடி சான்று வழங்கப் பட்டிருப்பின், அவற்றை உடனடியாக ரத்து செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அவர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 5 சவரன் வரை வழங்கப்பட்ட, நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.
நிபந்தனைகள்
இதையடுத்து, 2021 மார்ச் 31 வரை, நகை கடன் பெற்றவர்களில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய, 2021 நவ., 1ல் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.அதில், 'பயிர்க் கடன் தள்ளுபடியில் பயன் பெற்றவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நகைக் கடன் தள்ளுபடி பெற தகுதியில்லை' உட்பட பல்வேறு நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தன.அதன் அடிப்படையில், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய, வங்கிகளில் தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டன. இறுதியாக, 14.50 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் பெற்ற, 6,000 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது.
இறுதி கட்டம்
தேர்வான பயனாளிகளிடம் நடப்பாண்டு பிப்., இறுதியில் இருந்து, கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகைகள் திரும்ப வழங்கும் பணி துவங்கியது. அந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக, கூட்டுறவு தணிக்கை இயக்குனர் அலுவலக அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். அதில், அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என, 37 ஆயிரத்து 984 கடன்தாரர்கள் தகுதியற்றவர்களாக கண்டறிப்பட்டு உள்ளனர்.
சான்று
எனவே, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அசல் மற்றும் வட்டி தொகையான, 160 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யக் கூடாது என, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தகுதியற்ற கடன்தாரர்களுக்கு தள்ளுபடி சான்று வழங்கப் பட்டிருப்பின், அவற்றை உடனடியாக ரத்து செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அவர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!