ADVERTISEMENT
மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் இன்று யோகா நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பெரும் முயற்சிக்குப் பின், ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை, 2015ல் அறிவித்தது. அப்போது முதல், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அரண்மனையில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி செய்கிறார். அப்போது, இதற்கு முந்தைய யோகா தினங்களில் நடந்த சிறப்பம்சங்களின் தொகுப்பு, 'வீடியோ' வெளியிடப்படுகிறது. இதுபோல் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில், மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 'மனிதகுலத்துக்கான யோகா' என்பது, இந்தாண்டுக்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள். கொரோனா காலத்தின்போது ஏற்பட்ட துயரங்களை தணிப்பதில், யோகா எவ்வாறு மனிதகுலத்துக்கு சேவை செய்தது என்பதை விளக்கும் வகையில், இந்த கருப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பெரும் முயற்சிக்குப் பின், ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை, 2015ல் அறிவித்தது. அப்போது முதல், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுதும், 75 நகரங்களில் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அரண்மனையில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி செய்கிறார். அப்போது, இதற்கு முந்தைய யோகா தினங்களில் நடந்த சிறப்பம்சங்களின் தொகுப்பு, 'வீடியோ' வெளியிடப்படுகிறது. இதுபோல் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில், மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 'மனிதகுலத்துக்கான யோகா' என்பது, இந்தாண்டுக்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள். கொரோனா காலத்தின்போது ஏற்பட்ட துயரங்களை தணிப்பதில், யோகா எவ்வாறு மனிதகுலத்துக்கு சேவை செய்தது என்பதை விளக்கும் வகையில், இந்த கருப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!