Load Image
Advertisement

வீட்டு வசதித்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு இல்லை: அண்ணாமலைக்கு அமைச்சர் பதில்

Tamil News
ADVERTISEMENT

சென்னை: வீட்டு வசதித்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு இல்லை எனவும், ஒற்றை சாளர முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 5) அன்று நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறுகையில், 'ஜி ஸ்கொயர்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை முன்னேற்றும் நிறுவனமாக, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., மாறிவிட்டது, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இணையதளம் வாயிலாக மட்டுமே, சி.எம்.டி.ஏ., அனுமதி வழங்கப்படும் என, அரசாணை வெளியிடப்பட்டது. இதனால், சி.எம்.டி.ஏ., ஒப்புதலுக்கு, ஜி ஸ்கொயர் விண்ணப்பிக்கும் ஒரு மணி நேரம் மட்டும் தான், 'ஆன்லைன் லிங்க்' கிடைக்கும். மற்றவர்கள் விண்ணப்பிக்கும் போது இணைப்பு கிடைப்பதில்லை.இதனால், சிறிய நிறுவனங்கள், பாரம்பரிய நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்க, எதற்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் என்பது குறித்து, அமைச்சர் முத்துசாமி பதில் தர வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி:



வீட்டு வசதித்துறையில் ஒற்றை சாளர முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களில் பணிகள் முடிந்தவுடன் ஒற்றை சாளர முறை மூலமே அனைத்திற்கும் அனுமதி வழங்கப்படும். வீட்டு வசதித்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு இல்லை. ஒற்றை சாளர முறையை முழுமையாக கொண்டுவர ஓராண்டுகாலம் ஆகியுள்ளது.
Latest Tamil News

10ம் தேதி முதல் ஆன்லைனில் கட்டட அனுமதி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அடுக்குமாடி கட்டடத்திற்கு அமைச்சர் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரிகளே முடிவு செய்து அனுமதி வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


கோவையில் ஜி ஸ்கொயர் விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை.112 ஏக்கரில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு அனைத்து அனுமதிகளும் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டவை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.



வாசகர் கருத்து (29)

  • அருண் பிரகாஷ் மதுரை -

    அந்த கேள்விகளுக்கு இது பதில் இல்லையே...😂😂😂😂

  • sankaseshan - mumbai,இந்தியா

    குற்றம் சாட்டப்பட்டவர் தான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும் தமிழா இதுவே நடைமுறை ஆதாரம் இருந்தால் அமைச்சர் சொல்லட்டுமே

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    அன்று என்னுடைய நெருங்கிய நண்பர் பூச்சி முருகன் , வாழ்க வளமுடன் வந்தே மாதரம்

  • Girija - Chennai,இந்தியா

    அது என்ன ஸ்கொயர் ஆ ஜி ஸ்கொயர் , உங்களுக்கும் அந்த ஜி க்கும் அந்த 2 ஜி க்கும் என்ன பொருத்தமோ ? ஏழாம் பொருத்தமோ ? கோர்ட் கேஸ் ஆனாலும் தகத்தாயா கள்வர்கள் விடுதலை செய்யும் அளவிற்கு புரை யூரி உள்ளது .

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    "அடுக்குமாடி கட்டடத்திற்கு அமைச்சர் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரிகளே முடிவு செய்து அனுமதி வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது." ......... பார்த்து அமீச்சரே ..... அதிகாரிங்க மட்டும் சாப்டர போறாங்க ......

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up