சென்னை: வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்த வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ‛அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும். அரசுப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த இந்த வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மாற்றப்படுவர்,' எனக் கூறினார்.
வாசகர் கருத்து (19)
அரசு பள்ளி கல்வி சிறந்தது என்று ஆட்சியாளர்கள் அனைவருமே மார்தட்டி கூறுகின்றனர். ஆனால், அரசு சம்பளம் வாங்கும் முதலமைச்சர் / MLA / MP / அரசு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் வாரிசுகளை, அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை, ஏன் ??
எதிர் பார்த்தது தானே. இந்த விடியாத அரசு தனியார் கல்வி கொள்ளைக்காரர்களுக்காக தன்னை நீட்டை எதிர்க்கிறது.அது முடியவில்லை என்பதால் முதலாளிகளின் கோரிக்கை படி அரசு பள்ளிகளில் எல் கே ஜி யு கேஜி யை எடுக்கிறது. அப்ப தன முதலாளி கல்லா நிரம்பும் . இவர்களுக்கு கமிஸ்ஸன் கிடைக்கும்
சிறுபான்மை மதத்தவர்கள் நடத்தும் பள்ளி இதற்கு முழு பொறுப்பு
திருட்டு திராவிட மடியல் அரசு சரியாகத்தான் செய்கின்றது.???ஏன்???எல்கெஜி யூகேஜியிலேயே திருட்டு திராவிட மடியல் அரசு என்னவென்று புரிந்து விட்டால் அவர்களை அந்த வயதிலிருந்தே மதிக்கமாட்டார்கள் என்று அர்த்தமாகும்
அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் நடத்தினால் அப்புறம் எப்பூடி தனியார் பள்ளிகளின் முதலாளிகள், அதிகம் சம்பாதிக்க முடியும், சம்பாதித்தால்தானே அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முடியும்? அதான் இழுத்து மூடுறாங்க.