Load Image
Advertisement

ஒட்டகம் மூலம் மணல் கடத்தல்: போலீசார் விசாரணை

Tamil News
ADVERTISEMENT

காளையார்கோவில்,:காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் ஒட்டகத்தை மாட்டு வண்டியில் கட்டி மணல் கடத்தி வந்தவரிடம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.மறவமங்கலம் அருகே பல்லாக்கோட்டை சரவணன் 52. இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் மறவமங்கலம் பஸ் ஸ்டாண்டில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டியில் ஒட்டகத்தை கட்டி நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததை பார்த்தனர். மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தை பறிமுதல் செய்த மறவமங்கலம் புறக்காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். வழக்கு பதிந்தால் மாட்டு வண்டியுடன் மணலை பறிமுதல் செய்வார்கள்.

ஒட்டகத்தை யார்பராமரிப்பது
ஆனால் ஒட்டகத்தை பறிமுதல் செய்தால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் வரை அந்த ஒட்டகத்தை யார் பராமரிப்பது என்ற குழப்பத்தில் போலீசார் தவித்து வருகின்றனர். மணல் அள்ள அனுமதி இல்லாத நிலையில் டிப்பர் லாரி, டிராக்டரில் தான் மணல் கடத்தல் நடந்து வருகிறது. ஆனால் மறவமங்கலத்தில் சற்று நுாதனமாக ஒட்டகத்தை வைத்து மணல் கடத்தியுள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement