Load Image
Advertisement

இளைஞர் சக்தியை உருவாக்க கல்வியை தந்தாக வேண்டும்: ஸ்டாலின் பேச்சு

Tamil News
ADVERTISEMENT

சென்னை: ‛இளைஞர் சக்தியை உருவாக்க கல்வியை தந்தாக வேண்டும், அடிப்படை கல்வி மட்டுமல்ல உயர்கல்வியும் தந்தாக வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


சென்னை ராணிமேரி கல்லூரியில் மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். பின்னர் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்வும் இணைந்து நடக்கும் சிறப்பு விழா இது. உணர்ச்சிமிக்க மாணவிகள் புடைசூழ இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் இணைந்து பணியாற்றும் பண்பு தொடர வேண்டும், மற்ற அமைச்சர்கள் இதனை பின்பற்ற வேண்டும்.


இந்தியாவிலேயே முதல்முதலாக துவங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. ராணிமேரி கல்லூரியை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது மாணவிகளுக்கு ஆதரவாக பேசினேன். ஆனால் கல்லூரியின் கதவை தாண்டி குதித்ததாக அன்றைய தினம் நான் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். ராணிமேரிக் கல்லூரிக்காக சிறை சென்றேன் என்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம். இளைஞர்கள் என்றால் மாணவர்கள் மட்டுமல்ல, மாணவிகளும் தான். 18 முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாடு இந்தியா.

Latest Tamil News
இளைஞர் சக்தியை உருவாக்க கல்வியை தந்தாக வேண்டும், அடிப்படை கல்வி மட்டுமல்ல உயர்கல்வியும் தந்தாக வேண்டும். உயர்கல்விக்கு பிறகு வேலை, அதற்கேற்ற ஊதியம் ஆகியவற்றை தந்தாக வேண்டும். இந்த உழைப்பு சக்கரத்தை சரியாக தரும் அரசு தான் திமுக அரசு. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்று 2010ல் திமுக அரசு உருவாக்கியது. அன்று தேசிய அளவில் இத்தகைய திட்டம் செயல்பாட்டில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (30)

  • ராஜா -

    வர வர உங்கள் கல்வித்திட்டம் ...திட்டம் போல் ஆகிகொண்டு இருக்கிறது.

  • Ramesh RK - Theni,இந்தியா

    அரசு பள்ளி தரம் இல்லை தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் அதிகம் நாங்க என்க பொய் படிக்கறது மாண்பு மிகு முதல்வர் AVARKALE

  • Tamilan - NA,இந்தியா

    யாருக்கும் படிக்க விருப்பமில்லாமல் கல்லூரிகளில் பாதி சீட்டு காலியாக உள்ளது . [ஆலா வருடங்கள் இப்படித்தான் . படிப்பதை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிடவேண்டும் . மத்திய மாநில அரசுகள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு மக்களிடம் கட்டாயப்படுத்தி திணிக்க கூடாது . இதனால் சமூகம் சீர்கெட்டுவிட்டது . படித்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் உரிய வேலை கிடைக்கவில்லை . 90 % பேருக்கு வேலை உத்தரவாதம் இல்லை . 99 % பேர் தன மானத்தை இழந்து பணம் பொருள் பதவிக்காக நாட்டையும் இழக்கிறார்கள், மொழி இனத்தையும் இழக்கிறார்கள் . வேலையில்லா வெட்டித்தந்தங்கள்தான் மொழி, நாடு, இனம் பற்றி பேசுகிறார்கள் அதுவும் 99 % சுயநலனுக்காக . அரசு அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்து ஒருவரிடம் கொள்ளையடித்து இன்னொருவருக்கு படிக்க உதவிகள் செய்யக்கூடாது . நாடு உலகம் சீர்கெட்டு கிடப்பதற்கு படித்தவர்களின் பங்கு மிக அதிகம் .

  • sankaseshan - mumbai,இந்தியா

    மற தமிழனா அல்லது தெலுங்கு திராவிடனா ?

  • Karthik - Dindigul,இந்தியா

    மாணவர்கள் எதையும் படித்துவிடக்கூடாது, பரீட்சை எழுதக்கூடாது. அப்புறம் எப்படி இவரு சொல்லுறது சாத்தியம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்