Load Image
Advertisement

தனியார் பள்ளியில் மத பிரசாரம்:கலெக்டர், கமிஷனரிடம் புகார்

மதுரை,-மதுரை மழலையர் பள்ளியில் நடந்த சிறப்பு கோடை முகாமில், பிற பள்ளிகளின் மாணவ - மாணவியரை வரவழைத்து மத பிரசாரம் செய்ததாக, கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் ஆகியோரிடம், ஹிந்து முன்னணி புகார் தெரிவித்துள்ளது.


மதுரை, தெப்பக்குளம் பழைய மீனாட்சி நகர் ஜாய்ஸ் மழலையர் துவக்கப்பள்ளியில், மே 19ல் கோடை முகாமிற்கு, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியரை வரவழைத்து, அன்பு செலுத்துவது குறித்து போதிக்கப்பட்டது.வகுப்பு முடிந்து திரும்பிய மாணவர்களிடம், ஹிந்து முன்னணி அமைப்பினர் விசாரித்தனர்.



மதம் சார்ந்து பேசியதாகவும், அதை நாங்கள் கேட்டதற்காக பரிசு தந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.இதை வீடியோ ஆதாரமாக பதிவு செய்து, கலெக்டர், கமிஷனரிடம் ஹிந்து முன்னணி மாவட்ட செயலர் அரசுபாண்டி, நிர்வாகி மதன் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். விசாரணை நடக்கிறது.பள்ளி தாளாளர் ரஞ்சிதா கூறியதாவது:காழ்ப்புணர்ச்சியால் பழி சுமத்தி உள்ளனர். நான், 25 ஆண்டுகளாக இப்பள்ளியை நடத்தி வருகிறேன்.


பெற்றோர் தரப்பில் இருந்து, இதுவரை யாரும் புகார் செய்யவில்லை என்பதில் இருந்தே, புகாரில் உண்மையில்லை என புரிந்து கொள்ளலாம்.ஆண்டுதோறும் கோடை முகாம் நடத்தி, பிற பள்ளி மாணவர்களிடம் அனைத்து மத கருத்துக்களையும் கூறி, அன்பு செலுத்துவது குறித்து கூறி வருகிறோம்.மே 19ல், கிறிஸ்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கேட்டுக் கொண்டதற்காக, நிகழ்ச்சி நடத்த இடம் கொடுத்தேன். மத பிரசாரத்திற்காக இடம் கொடுக்கவில்லை. காழ்ப்புணர்ச்சியால் புகார் கூறியதால், முகாம் நடத்துவதை அன்றே நிறுத்திவிட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement