தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்த தன் ஆதரவாளர் வீட்டு திருமண விழாவில் சசிகலா பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க. உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது. எதிர்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும் நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. கட்சியை காப்பாற்றி மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக உருவாக்க தகுந்த நேரம் வந்து விட்டது.

ஆத்திரமடைந்த குரங்கு மாங்கொட்டையை துார எறிந்து விட்டு வருத்தப்பட்டது. குரங்கின் அவசர புத்திதான் அதற்கு காரணம்.விளைச்சல் கிடைக்க வேண்டும் என்றால் சில காலம் பொறுமை காக்க வேண்டும்.அதுபோல நம் செயல்கள் இருக்க வேண்டும். அப்படி செயல்பட்டால் தான் நம் இயக்கம் வலிமை பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த குரங்கு கதையை தினகரனுக்காக தான் கூறினார் என ஒரு தரப்பினரும் பழனிசாமிக்காக கூறினார் என மற்றொரு தரப்பினரும் பெரும் விவாதமே நடத்தி வருகின்றனர்.
இனிமேல் அரசியல் ஆசை வேண்டாமே. கோடி கணக்கில் பணம் சேர்த்தாச்சு. அப்புறம் என்ன ? வந்தாலும் மக்கள் வாகு அளிக்க மாட்டார்கள். அதிமுக அழிந்து விடும் உங்களை சேர்த்தால்.