சபரிமலை : வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு பூஜைகள் எதுவும் நடக்கவில்லை. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகம், நெய்யபிேஷகம், உஷபூஜை, களபாபிஷேகம், உச்சபூஜை, தீபாராதனை, அத்தாழ பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடக்கிறது. மே 19 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும்.
இன்று முதல் ஐந்து நாட்களிலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். நிலக்கல்லில் 'ஸ்பாட் புக்கிங்' வசதியும் செய்யப்பட்டுள்ளது. மே 19 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!