தும்பூர் நாகம்மன் கோவிலில் ஐந்தாம் வெள்ளி உற்சவம்
விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் தாங்கல் நாகம்மன் கோவிலில் சித்திரை மாத ஐந்தாம் வெள்ளி உற்சவம் நடந்தது. அதனையொட்டி, சுவாமிக்கு, சிறப்பு அபிேஷக, அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. குலதெய்வ வழிபாட்டுக்காரர்கள் பொங்கலிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறை செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் பல்லவி, கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!