நெஞ்சு வலியால் டிரைவர் பலி
புதுச்சேரி : நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட டிரைவர், மருத்து வமனைக்கு அழைத்து செல் லும் வழியில் இறந்தார்.நெல்லித்தோப்பு, கண்ணார வீதியை சேர்ந்தவர் முருகன், 43; சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந் தார். இவர், கடந்த 12ம் தேதி இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு படுத்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.உடனே அவரை, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!