அரசு ஊழியர் சங்கம் சார்பில் ரத்ததானம்
கரூர்-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், 4வது ரத்ததான முகாம், தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது. முகாமை, டி.ஆர்.ஓ., லியாகத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் ரத்த தானம் செய்தனர்.நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் முத்து செல்வன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், மகளிர் துணைக்குழு அமைப்பாளர் பிரவீணா உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!