மாரண்டஹள்ளி,- தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன்,52; விவசாயி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். காட்டு விலங்குகள் பயிரை சேதப்படுத்தாமல் இருக்க நிலத்தை சுற்றி மின்வேலி, மின்விளக்கு அமைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது விவசாய நிலத்திற்கு வந்த, 40 வயதுடைய யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. பாலக்கோடு வனத்துறையினர் மற்றும் மாரண்டஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிலத்திற்கு மின்வேலி, மின்விளக்கு அமைத்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த விவசாயி சீனிவாசன், நேற்று மாரண்டஹள்ளி போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மாரண்டஹள்ளி,- தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன்,52; விவசாயி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!