சிட்டி கிரைம்
பஸ் ஸ்டாண்டில் தகராறு
மாணவர்கள் மீது வழக்கு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மேல்பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல், 20; பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கிருஷ்ணகிரி அடுத்த கல்லுக்குறியை சேர்ந்த, 17 வயது பிளஸ் 1 மாணவர். கடந்த, 12ல், மதியம், 2:00 மணியளவில் கிருஷ்ணகிரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் பிளஸ் 1 மாணவர் தன்னை தாக்கியதாக வெற்றிவேல் அளித்த புகார் படி பிளஸ் 1 மாணவர் மீது கிருஷ்ணகிரி டவுன் போலீசாரும், இதேபோல மேல்பட்டி பஸ் ஸ்டாப்பில் தன்னை தாக்கியதாக பிளஸ் 1 மாணவர் அளித்த புகார்படி வெற்றிவேல்; மாது,30 ஆகிய இருவர் மீது மகாராஜகடை போலீசாரும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அடையாளம் தெரியாத
வாகனம் மோதி ஒருவர் பலி
ஓசூர்: ஓசூர், வசந்த நகர் சர்வீஸ் சாலையில் உள்ள ஜூவல்லரி கடை அருகே நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணியளவில், 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்றபோது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. ஓசூர் டவுன் வி.ஏ.ஓ., வெங்கடேஷ் மூர்த்தி புகார் படி ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவி மாயம்
வாலிபர் மீது புகார்
கிருஷ்ணகிரி: திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர், 18 வயது முதலாமாண்டு கல்லூரி மாணவி. இவர், பர்கூர் அடுத்த ஆம்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த, 12ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் மத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதில், கிருஷ்ணகிரி அடுத்த மோரமடுகை சேர்ந்த விக்னேஷ், என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். மத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம்பெண் மாயம்
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் வசந்தா, 26. கடந்த, 2ல், வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் சுரேஷ், 30, நேற்று முன்தினம் அளித்த புகார் படி வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
சாலையில் மயங்கி
விழுந்தவர் சாவு
ஓசூர்: ஓசூர், இந்திராநகர்
பகுதியில் நேற்று முன்தினம் நடந்து சென்ற,35 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. ஓசூர் டவுன் வி.ஏ.ஓ., வெங்கடேஷ் மூர்த்தி புகார்படி ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
உடல்நலம் பாதித்த
முதியவர் விபரீதம்
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த கொட்டாயூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் பொன்னுசாமி, 65; விவசாயி. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் காண்பித்தும் குணமாகாத விரக்தியில் கடந்த, 8ல், வீட்டில் விஷம் அருந்தி மயங்கினார். அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடனை திருப்பி தராத பெண்ணை
மிரட்டியவர்கள் மீது வழக்கு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெத்த மேலுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தாராபாய், 30. இவர், அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திர சிங், 55; ராஜம்மாள், 60, ஆகியோரிடம் ஒரு ஆண்டுக்கு முன் கடன் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பித் தரவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டும் தாராபாய் கொடுக்காததால் தாராபாய் வீட்டிற்கு கடந்த ஏப்.,28ம் தேதி சென்ற நாகேந்திரசிங், ராஜம்மாள் இருவரும் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அவர் புகார்படி மகாராஜகடை போலீசார் நாகேந்திரசிங், ராஜம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
லாட்டரி விற்ற 5 பேர் கைது
பாலக்கோடு: காரிமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது காரிமங்கலம் பஸ் நிலையம், ராமசாமி கோவில், அடிலம், சப்பாணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சிவகுமார்,45 கிருஷ்ணன்,37 அரவிந்த்பிரசாத், 27, உள்ளிட்ட 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
கிரானைட் கல் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் பர்கூர்- ஜெகதேவி சாலையில் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர். நள்ளிரவு, 12:30 மணியளவில் அவ்வழியாக லாரியில் கிரானைட் கல் கடத்தி வந்தவர்கள் அதிகாரிகளை பார்த்த்தும் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதிகாரிகள் கிரானைட் கல்லுடன் லாரியை பறிமுதல் செய்து, பர்கூர் போலீசிடம் ஒப்படைத்தனர். லாரி உரிமையாளர் தட்டக்கல் கார்த்திக், டிரைவர் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாட்டுத்துப்பாக்கி ஒப்படைப்பு
கிருஷ்ணகிரி: மிட்டஅள்ளி பஞ்., தலைவர் காவேரி, அங்கினாம்பட்டி ஊர்கவுண்டர் சஞ்சீவன் ஆகியோர் தங்கள் பகுதியில் கள்ளத்தனமான வைத்திருந்தவரின் நாட்டுத்துப்பாக்கியை, காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளியிடம் வழங்கினர். மாவட்ட எஸ்.பி., கள்ளத்துப்பாக்கிகளை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க கூறியது குறித்து ஊர்பகுதியில் தண்டோரா போடப்பட்டுள்ளதாகவும், ஓரிரு தினங்களில் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்துள்ளவர்களின் துப்பாக்கியும் காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
மனைவியை அடித்த கணவன் கைது
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி செம்புவராயன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாது,48;கூலி தொழிலாளி. இவரது மனைவி குட்டியம்மாள்,40. இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, இரண்டு மாதமாக பிரிந்து வாழ்கின்றனர். நேற்று குட்டியம்மாவிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்ட மாது, அவரை கட்டையால் தாக்கினார். இதில் அவரது கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின் படி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாதுவை கைது செய்தனர்.
மாணவியை திருமணம்
செய்த வாலிபருக்கு வலை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்த சி.மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜா மகன் பிரபு, 24. இவருக்கும், இண்டூர் அடுத்த நத்தஹள்ளியை சேர்ந்த, 16 வயது மாணவிக்கும் கடந்த, 29 ல், புளியம்பட்டியில் உள்ள, ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் அமைப்பினர், தர்மபுரி சமூக நலத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் கஸ்துாரி கொடுத்த புகாரின் படி, கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரித்ததில், பிரபு, பள்ளி மாணவியை திருமணம் செய்தது உறுதியானது. போலீசார், மாணவியை மீட்டு குழந்தைகள் நலக்குழும பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்து, தலைமறைவாக உள்ள பிரபுவை தேடி வருகின்றனர்.
மாணவர்கள் மீது வழக்கு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மேல்பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல், 20; பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கிருஷ்ணகிரி அடுத்த கல்லுக்குறியை சேர்ந்த, 17 வயது பிளஸ் 1 மாணவர். கடந்த, 12ல், மதியம், 2:00 மணியளவில் கிருஷ்ணகிரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் பிளஸ் 1 மாணவர் தன்னை தாக்கியதாக வெற்றிவேல் அளித்த புகார் படி பிளஸ் 1 மாணவர் மீது கிருஷ்ணகிரி டவுன் போலீசாரும், இதேபோல மேல்பட்டி பஸ் ஸ்டாப்பில் தன்னை தாக்கியதாக பிளஸ் 1 மாணவர் அளித்த புகார்படி வெற்றிவேல்; மாது,30 ஆகிய இருவர் மீது மகாராஜகடை போலீசாரும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அடையாளம் தெரியாத
வாகனம் மோதி ஒருவர் பலி
ஓசூர்: ஓசூர், வசந்த நகர் சர்வீஸ் சாலையில் உள்ள ஜூவல்லரி கடை அருகே நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணியளவில், 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்றபோது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. ஓசூர் டவுன் வி.ஏ.ஓ., வெங்கடேஷ் மூர்த்தி புகார் படி ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவி மாயம்
வாலிபர் மீது புகார்
கிருஷ்ணகிரி: திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர், 18 வயது முதலாமாண்டு கல்லூரி மாணவி. இவர், பர்கூர் அடுத்த ஆம்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த, 12ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் மத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதில், கிருஷ்ணகிரி அடுத்த மோரமடுகை சேர்ந்த விக்னேஷ், என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். மத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம்பெண் மாயம்
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் வசந்தா, 26. கடந்த, 2ல், வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் சுரேஷ், 30, நேற்று முன்தினம் அளித்த புகார் படி வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
சாலையில் மயங்கி
விழுந்தவர் சாவு
ஓசூர்: ஓசூர், இந்திராநகர்
பகுதியில் நேற்று முன்தினம் நடந்து சென்ற,35 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. ஓசூர் டவுன் வி.ஏ.ஓ., வெங்கடேஷ் மூர்த்தி புகார்படி ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
உடல்நலம் பாதித்த
முதியவர் விபரீதம்
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த கொட்டாயூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் பொன்னுசாமி, 65; விவசாயி. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் காண்பித்தும் குணமாகாத விரக்தியில் கடந்த, 8ல், வீட்டில் விஷம் அருந்தி மயங்கினார். அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடனை திருப்பி தராத பெண்ணை
மிரட்டியவர்கள் மீது வழக்கு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெத்த மேலுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தாராபாய், 30. இவர், அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திர சிங், 55; ராஜம்மாள், 60, ஆகியோரிடம் ஒரு ஆண்டுக்கு முன் கடன் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பித் தரவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டும் தாராபாய் கொடுக்காததால் தாராபாய் வீட்டிற்கு கடந்த ஏப்.,28ம் தேதி சென்ற நாகேந்திரசிங், ராஜம்மாள் இருவரும் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அவர் புகார்படி மகாராஜகடை போலீசார் நாகேந்திரசிங், ராஜம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
லாட்டரி விற்ற 5 பேர் கைது
பாலக்கோடு: காரிமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது காரிமங்கலம் பஸ் நிலையம், ராமசாமி கோவில், அடிலம், சப்பாணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சிவகுமார்,45 கிருஷ்ணன்,37 அரவிந்த்பிரசாத், 27, உள்ளிட்ட 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
கிரானைட் கல் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் பர்கூர்- ஜெகதேவி சாலையில் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர். நள்ளிரவு, 12:30 மணியளவில் அவ்வழியாக லாரியில் கிரானைட் கல் கடத்தி வந்தவர்கள் அதிகாரிகளை பார்த்த்தும் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதிகாரிகள் கிரானைட் கல்லுடன் லாரியை பறிமுதல் செய்து, பர்கூர் போலீசிடம் ஒப்படைத்தனர். லாரி உரிமையாளர் தட்டக்கல் கார்த்திக், டிரைவர் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாட்டுத்துப்பாக்கி ஒப்படைப்பு
கிருஷ்ணகிரி: மிட்டஅள்ளி பஞ்., தலைவர் காவேரி, அங்கினாம்பட்டி ஊர்கவுண்டர் சஞ்சீவன் ஆகியோர் தங்கள் பகுதியில் கள்ளத்தனமான வைத்திருந்தவரின் நாட்டுத்துப்பாக்கியை, காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளியிடம் வழங்கினர். மாவட்ட எஸ்.பி., கள்ளத்துப்பாக்கிகளை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க கூறியது குறித்து ஊர்பகுதியில் தண்டோரா போடப்பட்டுள்ளதாகவும், ஓரிரு தினங்களில் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்துள்ளவர்களின் துப்பாக்கியும் காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
மனைவியை அடித்த கணவன் கைது
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி செம்புவராயன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாது,48;கூலி தொழிலாளி. இவரது மனைவி குட்டியம்மாள்,40. இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, இரண்டு மாதமாக பிரிந்து வாழ்கின்றனர். நேற்று குட்டியம்மாவிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்ட மாது, அவரை கட்டையால் தாக்கினார். இதில் அவரது கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின் படி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாதுவை கைது செய்தனர்.
மாணவியை திருமணம்
செய்த வாலிபருக்கு வலை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்த சி.மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜா மகன் பிரபு, 24. இவருக்கும், இண்டூர் அடுத்த நத்தஹள்ளியை சேர்ந்த, 16 வயது மாணவிக்கும் கடந்த, 29 ல், புளியம்பட்டியில் உள்ள, ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் அமைப்பினர், தர்மபுரி சமூக நலத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் கஸ்துாரி கொடுத்த புகாரின் படி, கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரித்ததில், பிரபு, பள்ளி மாணவியை திருமணம் செய்தது உறுதியானது. போலீசார், மாணவியை மீட்டு குழந்தைகள் நலக்குழும பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்து, தலைமறைவாக உள்ள பிரபுவை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!