3 ஆண்டுக்கு முன் காணாமல் போன நாட்டு வைத்தியர்கேரளாவில் துண்டு, துண்டாக்கி கொன்ற நால்வர் கைது
மைசூரு : மைசூரின் வசந்த நகரில், மூன்று ஆண்டுகளுக்கு முன், காணாமல் போன பிரபலமான நாட்டு வைத்தியர் ஷாபா ஷெரிப் கொலையானது கண்டுப்பிடிக்கப்பட்டது. நால்வர் கைது செய்யப்பட்டனர்.மைசூரின் ஜனதா நகர் அருகிலுள்ள, வசந்த நகரில் வசித்த ஷாபா ஷெரிப், ௪௫. இவர் நாட்டு வைத்தியர். மூல நோய்க்கு மருந்து கொடுத்தார். விரைவில் குணமடைந்ததால், கேரளாவிலிருந்தும் ஏராளமான நோயாளிகள், மைசூருக்கு வந்து மருந்து வாங்கினர்.
இதுவே அவரை பிரபலப்படுத்தியது.இந்நிலையில் 2019 ஆகஸ்டில், கேரளாவிலிருந்து வந்த இருவர், நோயாளிகளுக்கு மருந்து கொடுக்க வேண்டும் என கூறி, நாட்டு வைத்தியரை அழைத்து சென்றனர். அதன்பின் அவர் திரும்பி வரவேயில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், சரஸ்வதி புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும் அவரது மொபைல் நெட் ஒர்க் அடிப்படையில், கேரளா வரை சென்று, அவரை தேடி பார்த்து வெறுங்கையுடன் திரும்பினர். வழக்கும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள தொழிலதிபர் ஷிபின் அஸ்ரப், ௪௨, என்பவர் வீட்டில், நடப்பாண்டு ஏப்ரல் 24ல், ஏழு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதுபற்றி அவர் போலீசாரிடம் புகார் செய்தார். போலீசாரும், அஸ்ரப் நண்பர் தங்களகட்டு என்பவரை, கைது செய்தனர்.இதனால் கோபமடைந்த இவரது நண்பர்கள், கேரள மாநில அமைச்சகம் முன், பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தனர். அவர்களை காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்தனர்.அவர்களை விசாரித்த போது, கிடைத்த தகவல்கள்: மைசூரின் நாட்டு வைத்தியர் ஷாபா ஷெரிப்பை, தொழிலதிபர் ஷிபின் அஸ்ரப், கேரளாவுக்கு அழைத்து வந்தார். நாட்டு வைத்தியரிடம் மருந்து ரகசியத்தை தெரிந்து கொண்டு, மருந்து தயாரித்து துபாய் உட்பட வெளிநாட்டில் விற்று அதிக பணம் சம்பாதிப்பது, தொழிலதிபர் திட்டமிட்டார்.கேரளாவில் நாட்டு வைத்தியரை, ஓராண்டு தன் வீட்டில் அடைத்து வைத்து, சித்ரவதை செய்து, கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி, அவற்றை பிளாஸ்டிக் கவரில் போட்டு, சளியார் ஆற்றில் வீசினர்.
இதற்காக தன் நண்பர் தங்களகட்டு, அவரது நண்பர்களை பயன்படுத்தினார். ஆனால் பேசியபடி பணம் கொடுக்காததால், தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்தது தெரிந்தது. சித்ரவதை செய்த வீடியோக்கள் இருந்த பென் டிரைவையும், போலீசாரிடம் கொடுத்தனர்.இதை பார்த்து நாட்டு வைத்தியர் மனைவி, பிள்ளைகள் அடையாளம் காண்பித்தனர். இதையடுத்து ஷிபின் அஸ்ரப் உட்பட நான்கு பேரை மைசூரு போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!