கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் அமைப்பின் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனு நீதிபதி கே.ஹரிபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ''பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாமற்றும் சோஷியல் டெமாக்ட்ரடிக் பார்ட்டி ஆகியவை பிரிவினைவாத அமைப்புகள் என்பதில் சந்தேகம்இல்லை. இந்த அமைப்புகள் தீவர வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றன. ''ஆனால் இதுபோன்ற இயக்கங்களை மத்திய அரசு இன்னும் தடை செய்யவில்லை,'' என்று கருத்து தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதியின் இந்தக் கருத்துக்கு, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கத்தி, குண்டு, துப்பாக்கி கலாச்சாரங்கள் கொண்ட எந்த கட்சியும் அமைப்பும் நாட்டு நலனுக்காக கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் ஆயுதங்கள் எதுவும் இல்லாமலே, தங்களுடைய சித்தாந்தங்களால் வெறுப்பு வளர்த்து மக்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாக்கி நாட்டை அழிக்கும் அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும்.